சரவணன் “நண்பன்’நா உன் சந்தோஷத்துல மட்டும் பங்கெடுக்க இல்லைடா, உன் கஷ்ட்டத்துலையும் எனக்கு பங்கு இருக்கு. ரொம்பப் போட்டு குழப்பிக்காத வா போகலாம். சங்கீ கிட்ட இப்போ எதும் சொல்லாத. பிரச்சணைய முடிச்சிட்டு சொல்லிக்கலாம்.” என முடித்தார். அவர்களின் இருபது வருட பழக்கம் ஒருவருக்கு ஒருவர் உற்ற நண்பர்களாக மாற்றியிருந்தது.
விஜியிடம் சொல்லி முடித்தவர். “நான் உங்கிட்ட கேட்காம முடிவு பண்ணதுல உனக்கு ஏதும் கோவம் இல்லையேடா.. அவன என்னால இப்படி பார்க்க முடியலை அதான்..” என மனைவிக்கு அளிக்க வேண்டிய விளக்கத்தை கூற..
அதுவரை தன் கணவனையேப் பார்த்துக் கொண்டிருந்த விஜி “எனக்கு ஒரு அண்ணன் இருந்த நான் உங்கள சொல்ல மாட்டேனா உதவ சொல்லி.. அவரு உங்களுக்கு நண்பன்’நா எனக்கு அண்ணன்.. அப்படி தான இவ்ளோ வருஷம் பழகியிருக்கோம். நீங்க சரியா தான் பண்ணியிருக்கீங்க.” என விஜிக் கூற சரவணனுக்கு பெருமையாக இருந்தது தன்னைப் புரிந்துக் கொள்ளும் மனைவி வாய்த்திருகிறாளென.
ஆனால் அவர் யோசித்துக் கொண்டிருந்தது இது மட்டும் அல்ல. ஐஜி ஆஃபிசிலிருந்து வெளியே வந்தப் பொழுது ஒரு பெரியவர் பைத்தியக்காறர் போல இருந்தவர் சரவணனனிடம் வந்து “உன் குடும்பத்தை நல்ல பார்த்துக்க, நேரம் சரியில்லை.. நேரம் சரியில்லை “ என இதையே சொல்லிக் கொண்டு அவரை கடந்து சென்றார்.
தள்ளி நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்த சேகர் வந்து “என்ன டா சொல்லிட்டு போறாரு..” என கேட்க.. “ஒன்னும் இல்லை டா வா போகலாம்” என அந்த பெரியவர் சென்ற திசையைப் யோசனையுடன் பார்த்துக் கொண்டே சென்றார். அந்தப் பெரியவர் ஏன் அப்படி சொன்னார் என்று உள்ளுக்குள் தோன்றிக் கொண்டே இருந்தாலும், இதை விஜியிடம் சொல்லவில்லை.. எதற்கு வீனாக அவரையும் கவலைக் கொள்ள செய்ய வேண்டும் என.
அப்போது வாயிலில் நிழலாடுவதைக் கண்டு இருவரும் திரும்ப அங்கு சேகர் சங்கீ நின்றுக் கொண்டிருந்தனர். “உள்ளே வா சங்கீ ஏன் அங்கேயே நிக்கிற.. வாங்க ண்ணா..” என விஜி இருவரையும் அழைக்க.. உள்ளே வந்த சங்கீ நேராக சரவணனனிடம் வந்து கை கூப்ப.. சரவணனன் சேகரை முறைத்தார்..
“அவரை முறைக்காதீங்க ண்ணா. அவர் எங்கிட்ட சொல்லாம இருக்க மாட்டாரு.. ஆனா நீங்க உதவி பண்ணறத முழு மனசா ஏத்துக்க முடியல. எவன் கிட்டையோ இவரு ஏமாந்திட்டு வந்ததுக்கு நீங்க ஏன் ண்ணா அதை அடைக்கனும். சந்தோஷ் இருக்கான் நாங்க பாத்துக்கறோம்..” என சங்கீ சொல்ல..
“என்ன மா நாங்க பாத்துக்கறோம்னு பிரிச்சு பேசற. நாளைக்கு எனக்கு ஒரு பிரச்சனைனா இப்படி