“ஹர்ஷூ ஹர்ஷூ எங்கடா இருக்கே” என கத்திக் கொண்டே ரித்து ஷைலுவையும் இழுத்துக் கொண்டுப் போகும் போது தான் கவனித்தாள் அங்கு போர்ட்டிகோவில் ஒரு ராயல் என்ஃபீல்ட் பைக் இருப்பதை..
“ஐயயோ அந்த வில்லேன் வீட்ல தான் இருக்கான் போல.. பேசாம இப்படியே திரும்பி போயிரலாமா?” என ஆனானப்பட்ட ரித்துவே பயப்பட..
“ஷூ பேசாம இருடி.. ஹர்ஷ் தான் இருக்கான் ல அப்புறம் என்ன.. வா” என்றப் படி ஷைலு ரித்துவை உள்ளேத் தள்ள.. தனது ஷர்ட்டின் கையை மடித்துக் கொண்டே வந்தவன் ரித்துவின் மேல் மோதிக்கொண்டான்.
கொலை வெறியுடன் ரித்து ஷைலுவை முறைக்க.. அந்த அவனோ அவனும் ஷைலுவை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.. அவனது உக்கிர முறைப்பில் அவளுக்கு லேசாக பயமாக இருந்தாலும் கண்டுக்காமல் இருந்தாள்.. அவளின் அலட்ச்சியப் பார்வையில் இன்னும் கடுப்பானவன் தடதடவென படிகளில் இறங்கி போர்ட்டிகோவிலிருந்த அவனது புல்லட்டை உறுமவிட்டு அதில் பறந்தான்..
“ஹப்பா இப்போ தான் மூச்சே வருது.. ஏன்டி அறிவு கெட்டவளே என்னை இப்படி அவன் மேலத் தள்ளி விட்டே!?! வில்லேன் எப்படி முறச்சிட்டுப் போறான்”
“ஆமா அவன் உன்னை தான முறைச்சு இருக்கனும்.. உன்னை விட்டுட்டு என்னை பார்வையிலையே பஸ்மமாக்கிட்டான்..”
“நீ தான தள்ளி விட்டே அதுனாலையா இருக்கும்.. “ என இவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்கும் போதே ஹர்ஷா வந்தான்..
“ஹேய் வானரம்ஸ் என்ன வாசல்ல நின்னு அடிச்சுக்கிட்டு இருக்கீங்க.. உங்க ரெண்டுப்பேருக்கும் வேற வேலையே இல்லையா..” என இருவரின் காதையும் திருக..
“விடுடா ஹர்ஷு வலிக்குது இவ தான் என்ன உங்க வீட்டு வில்லேன்” அவனின் முறைப்பில் “சாரி சாரி உன் அண்ணன் மேல தள்ளி விட்டுட்டாள்.. அதான் டா” என அவள் சொல்ல..
“அச்சச்சோ.. அவன் கிட்ட ஏன் டா உங்களுக்கு வம்பு.. வந்து என்னை காய்ச்சி எடுத்திருவானே.. சரி நம்ம பாக்காததா..” என அவனும் புலம்ப..
“ஹேய் ரெண்டுப் பேரும் கொஞ்சம் நிறுத்தறீங்களா.. சும்மா புலம்பிட்டு.. ஏன்டா ஹர்ஷா நீ மட்டும் எப்படி டா இப்படி சாதுவா பிறந்த.. அப்படி ஒரு முசுட்டு அண்ணனுக்கு இப்படி ஒரு தம்பி.. ச்சு ச்சு.. சோ சேட்..” என உச்சுக் கொட்ட.. மற்ற இருவரும் இவளுக்கு பின்னால் பார்த்து ‘பே’ என முழித்துக் கொண்டிருந்தனர். ‘எதுக்கு இதுங்க இப்படி முழிச்சுட்டு இருக்குதுங்க’ என யோசித்துக் கொண்டே ஷைலு ஸ்லோ மோஷனில் திரும்ப அங்கு ருத்ர மூர்த்தியாக அந்த அவன் அதாவது