ஹர்ஷாவின் அண்ணன் நின்றுக் கொண்டிருந்தான்.. ‘ஹையயோ இவன் எப்போ வந்தான்.. வண்டி சத்தமே கேக்கல.. கடங்காரன் வெளியவே நிறுத்திட்டு வந்திட்டான் போல.. தெரிஞ்சு இருந்தா உஷார் ஆயிருப்பேனே..’ என இவளும் அவர்களுடன் சேர்ந்து முழிக்க
மூவரையும் ஒருப் பார்வை பார்த்தவன் நேரே தனது அறைக்கு சென்று வேண்டிய ஃபைலை எடுத்துக் கொண்டு விறு விறுவென சென்றுவிட்டான். போகும் போது ஷைலுவிற்கு ஒரு முறைப்பைப் பார்சல் செய்யவும் மறக்கவில்லை.
“சப்பாஆஅ எப்படி டா இந்த பீசை வீட்ல வெச்சு சமாளிக்கறீங்க..” சொன்னப் பிறகு பதறி அடிச்சுக் கொண்டு திரும்பி பார்த்தாள் எங்கு அவன் திரும்ப வந்துவிட்டானோ என. அவளின் செயலைக் கண்டு ரித்து ஹர்ஷா விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
“சரி வாங்க என் ரூம் பால்கனிக்கு போலாம்.” என மூவரும் சென்றனர்.
அந்த புல்லெட்டை லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்த அந்த அவனின் முகத்தில் மெல்லிய புன்னகை ஷைலுவை நினைத்து. அவன் தான் வினய்.
ஹர்ஷாவின் உடன் பிறந்தவன். பொறியியல் படிப்பை முடித்த கையோடு தனது நண்பன் ஆரம்பித்த ஐ.டி கம்பனியில் பங்குதாரராக இருக்கிறான். சிறு வயதிலிருந்தே அவர்கள் மூவரின் நட்பின் மேல் அவனுக்கு லேசாக பொறாமை.
மூன்று பேரும் எப்பொழுதும் ஒன்றாக தான் இருப்பர்.. அதனாலையே சிறு வயதில் ரித்து ஷைலுவை நன்றாக வம்பிழுப்பான்.. அதனால் தான் அவனை வில்லேன் என்று அழைப்பர். அதிலும் ரித்து அவனைப் பார்த்தாலே தெறித்து விடுவாள்.
கொஞ்சம் இவன் பெரியவனானவுடன் அவர்களை சீண்டுவதை நிறுத்திக்கொண்டான் இருந்தும் அவ்வப்போது இப்படி ஏதேனும் செய்து மாட்டிக் கொள்ளும் அந்த மூவரணி இவனிடம். ஹர்ஷாவைக் கூட திட்டுவான் பல சமயம் இப்படி எப்பொழுது பெண் பிள்ளைகள் கூடவே சுற்றுவதற்கு.. ஆனால் ஹர்ஷா காதிலையேப் போட்டுக் கொள்ளமாட்டான்.
அவர்கள் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள் ஆதலால் பெரும்பாலான சமயம் மருத்துவமனையில் தான் இருப்பர். வினய்யும் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பவன் ஆதலால் தன் தனிமையைப் போக்கிய அவ்விருவரும் ஹர்ஷாவின் இன்றியமையாதவர் ஆயினர்.
வினய் வெளியே முறைப்பது போல காண்பித்துக் கொண்டாலும் அவனின் உள் மனதிற்கு ஷைலு என்றும் ஸ்பெஷல். அவள் மேல் மலையளவு இருந்த கோபம் கூட இப்பொழுது காணாமல் போயிருந்தது அவளை நேரில் கண்டதில். காலம் தனக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை அறியாமல் அவளது நினைவுகளுடன் பயணித்துக் கொண்டிருந்தான்.
தொடரும்
Go to Maravenaa ninnai story main page
Next episode will be published as soon as the writer shares her next episode.
{kunena_discuss:1161}