அடிபட்டிருக்கு… ஆப்ரேஷன் பண்ணிட்டாங்க. நாலு மணி நேரம் ஆனபின்தான் எடி ஸேஃபானு சொல்ல முடியுமாம். அவங்களை தனியே விட்டு போக முடியாது. அதுதான் காத்திட்டு இருக்கேன்" என்று அலுப்பாக சொன்னான்.
அவனுக்கு எடியுடைய நிலைமை பற்றி அவ்வளவாக கவலை இல்லை என்று சத்யனுக்கு தோன்றியது. ஆனால் ரேச்சல் அப்படி இருக்க மாட்டாளே... அவள் எங்கே என்று கண்களால் சுற்றுபுறத்தை அலசினான்.
அதோ அவள் அங்கே நிற்கிறாள்…! ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு ஆகாயத்தை வெறித்து பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அங்கே இருளில் அவள் எதை தேடிக்கொண்டிருக்கிறாள். ஒருவேளை இறைவனிடம் வேண்டிக் கொண்டு இருக்கிறாளோ?. பாதி மட்டுமே தெரிந்த அவள் முகத்தில் இருந்த கலக்கமும் கலவரமும் சத்யனை ஒரு மாய காட்சிக்குள் இழுத்தது.
அவனுக்கு ரேச்சல் மறைந்து மீராதான் அங்கு நிற்பது போல தோன்றியது. அவனையும் அறியாமல் ஒரு விரைவுடன் ரேச்சல் அருகில் சென்றான். ரட்சிப்பார் யாரும் உளரோ… என்று கண்ணில் நீர் வழிய நின்றவளை பார்க்கவும் மனம் பரிதவிக்க… இரு கைகளும் அபயமளிப்பதுபோல நீள...
"மீரா…!" என்றான்.
அவன் குரல் கவலையும் ஆதங்கமும் கலந்த கலவையாகி கிசுகிசுத்து காற்றில் பரவியது. ஒரு அதிர்வுடன் திரும்பிய ரேச்சலின் முகத்தில் மொத்த பயமும் தெறித்தது… ஆயுள் முழுவதும் தேடிக் கொண்டு இருந்த அவளுக்கான அபயம் அந்த கைகளில் கிடைத்து விட்டது போல ஓடி வந்து அவனுடைய கைகளில் சரணடைந்தாள்.
"சத்தீ…' பெருங்குரலெடுத்து அழுதாள்.
"என்னை விட்டு எங்கே போயிட்டீங்க. நான்… நான்… தவிச்சு… பயந்து…" கதறினாள்.
"நான் வந்துட்டேன். கவலைபடாதே..."அவளை ஆதரவாக அணைத்த சத்யன் சமாதானப்படுத்த முயற்சித்தான்.
"அஹ்ம்… அஹ்ம்.. சத்தி..ப்ளீஸ் போயிடாதீங்க…" அவள் இன்னும் கேவலாக சொன்னாள்.
ரேச்சலுக்கு கவலை விட்டதோ இல்லையோ… அந்த காட்சியை பார்த்த ஜெமி கலவரமாக… ரஞ்சன் பதட்டமாக… ஷீலாவிற்கு மூச்சே நின்று போனது. இங்கே என்ன நடக்குது…?
அவர்களின் நிலையை சற்றும் கவனிக்காமல்… ரேச்சல் சத்யனிடம் கெஞ்சலும் அழுகையுமாக பேசிக் கொண்டு இருந்தாள். மெல்லிய குரலில் சத்யன் பேசினாலும் அவன் உதடுகள் மீரா மீரா… என்று உச்சரிப்பது ரஞ்சனுக்கு புரிந்தது.
அச்சோ… காரியத்தை கெடுத்துட்டானே… என்று பதறியவனாக சத்யனின் அருகில் சென்றான். அவன் தோளை தட்டி…
"ப்ச்… சத்யன்… நீ என்ன செய்துட்டு இருக்கே" என்று மெல்லிய குரலில் எச்சரித்தான். முதலில்