"ரஞ்சன் நான் பழையபடி நம்ம வீட்டுக்கு போயிடலாம்னு இருக்கேன்…"
"ப்ச்… வேண்டாம். எனக்கே பர்சனலா ஒரு நம்பிக்கை இருக்குப்பா… நந்தினி இங்கே வந்தபின்தான் கன்சீவ் ஆகி இருக்காள்… டெலிவரி முடியும்வரை இங்கே இருந்தால் நல்லதுனு தோணுது"
"நீங்க இங்கே இருங்கப்பா… நான் மட்டும் போறேன்"
அச்சோ… இந்த ஏற்பாட்டிற்கு மட்டும் ரஞ்சன் ஒப்புக் கொண்டால் நந்தினி அவனை மன்னிக்கவே மாட்டாளே…! பக்கத்தில் இருந்தால்தான் அப்படி இப்படினு கண்ணுல ரேச்சல் பட்டுக் கொண்டே இருப்பாள். இவன் இங்கிருந்து ஓடி விட்டால் அவர்களுடைய திட்டம் என்ன ஆவது…?
"நீ மட்டும் தனியா இருந்தால் பிரச்சினை வரும்பா… தனு வந்து எதையாவது டிராமா பண்ணகூட சான்ஸ் இருக்கு" பயமுறுத்தினான். அது வொர்க் அவுட் ஆயிடுமா?
"ஆமாம்… இங்கவரைக்கும் அவள் வர மாட்டாள். தாத்தா மீது பயம் உண்டு…" சத்யன் ஒப்புக் கொண்டான்.
"அதுக்குதான் சொல்றேன்… இங்கதான் பாதுகாப்பு… ரேச்சல்தான் பிரச்சினை என்றால் அவள் பக்கம் திரும்பாமல் இருந்தால் போதும்"
"அது…."
"கொஞ்சம் பொறுமையாக இருப்பா… அநேகமாக அவள் இந்த பக்கம் கொஞ்ச நாளைக்கு வர மாட்டாள்னு நினைக்கறேன். அவளும்தான் தப்பு செய்தாள்"
ஒரு வழியாக சத்யன் சமாதானமாக… அங்கே ஷீலாவை ரேச்சல் சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
"ட்ரஸ்ட் மீ மா…. நான் வேணும்னு செய்யவில்லை…"
"ரேச்சல்… நீ இறைவனுக்கு பதில் சொல்ல முடியுமா… உன் மனதின் நியாயத்திற்கு பதில் சொல்ல முடியுமா….?. நீ செய்தது பெரிய தவறு.. எடி உன் நண்பன்தான்…. அவனுக்கு உதவ நான் இருக்கிறேன்… அந்த சத்யன் என்ன செய்துவிட முடியும்?. எப்படி அவ்வாறு நினைத்தாய்"
"சத்யன் சார் எதுவும் செய்வார் என்று நினைக்கலைமா…"
"அப்படி என்றால் அவரிடம் சலுகை சொல்லி ஆறுதலை எதிர்பார்த்திருக்கிறாய்… அப்படி அவர் என்ன நெருக்கமான உறவா?"
ஷீலா பேசுவதை கேட்கவும் ஜெமி திடுக்கிட்டான். இது தப்பான ட்ராக்ல போயிட்டு இருக்குதே… சத்யனை ரேச்சல் கட்டிபிடிச்சு அழுதது கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது. ஆனாலும் அமெரிக்க கண்ணோட்டத்தில் அதை நட்பு ரீதியாக என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டான். ஆனால் அத்தை அழுத்தமாக பேசி இருவருக்கும் இடையே புது உறவை உருவாக்கி விடுவார்கள் போலிருக்கிறதே… உடனே ஸ்டாப் பண்ணியாகணும் என்று பதறினான்.