மருத்துவமனையில் நடந்ததை அவன் விவரித்தான்.
"சவுண்ட்ஸ் குட்பா… நல்லது நடந்திருக்கு"
"ஆமாம்… உசுர காப்பாத்திட்டு ஓடி வந்தோம்ல…"
"அது இல்லப்பா… ரெண்டு பேருக்கும் இடையில பேஸிக்காவே ஒரு ஃபயர் இருக்குப்பா"
"ரெண்டும் சேர்ந்து அந்த ஃபயரை தூக்கி என் தலைல வச்சிடுங்கபோல…"
"ரப்பிஷா பேசாதீங்க… இப்பதான ஆரம்பிச்சிருக்கு… அதெப்படி என்ன நடக்கும்னு இப்பவே சொல்ல முடியும்?. நெக்ஸ்ட் என்ன மூவ்னு பார்க்கணும்"
"போம்மா… என்னோட ரத்த காயத்தை பார்க்காமல் விட மாட்ட போலிருக்கு…"
அவள் எதையோ சொல்ல வாய் திறக்கும்போது… கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. ரஞ்சன் எழுந்து போய் கதவை திறந்தான்… சத்யன் நின்றிருந்தான்.
"கொஞ்ச நேரம் மனு எங்கிட்ட இருக்கட்டுமா? முழிச்சிட்டுதான இருக்காள்"
"ஆமாண்ணா… " என்ற நந்தினி வாக்கரில் இருந்த மனுவை தூக்கி அவனிடம் தந்தாள். அவளை வாங்கியவன் இறுக அணைத்தபடி வெளியேறினான்.
"மனுவை எதுக்கு தூக்கிட்டு போறான்"
"பாவ மன்னிப்பிற்காகதான்…" நந்தினி சிரித்தாள்.
"என்ன?"
"அது ரேச்சலை கட்டிபிடிச்சிட்டு இருந்ததை பெரிய தப்பாக அண்ணன் நினைக்கிறார்… அது அவருக்குள் ஒரு குற்ற உணர்வை உருவாக்கியிருக்கும்… தன் தவறை எண்ணி கூசும் ஒவ்வொரு மனமும் என்ன செய்யும்… ஆண்டவா… சர்வேசானு… புலம்பும். குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே.. அதனால மனுகுட்டிகிட்ட மானசீகமாக மன்னிப்பு கேட்பார்னு நினைக்கிறேன்…"
"என்னா ஒரு கற்பனை..! மனசு வலிச்சு எதுக்கு மனுகிட்ட மன்னிப்பு கேட்பானாம்.."
"ஆமாம்.. அப்படித்தான்… இப்போதைக்கு மனுதானே மீராவின் பிரதிபலிப்பு… மீராவின் நினைவு அவள்தானே. மனுதான் அவர்களிடையேயான அன்பிற்கான சாட்சி. அவளிடம் மன்னிப்பு கேட்பதும் இயல்புதானே.. வேணும்னால் இப்பவே வாங்க… செக் பண்ணி பார்த்துடலாம்… அண்ணன் மனுகிட்ட மன்னிப்பு கேட்கற காட்சிய பார்க்கலாமா?"
"ஆஹாங்… மனுவோட காலை பிடிச்சிட்டு கதறுவான்னு சொல்றியாக்கும்… ஓகே.. வா பார்த்துடலாம்" அவளை கை பற்றி அழைத்து சென்றான். சத்யன் அறைக்குள் நுழையும் முன் அவனை தடுத்தவள்… அங்கேயே நிறுத்தினாள். வாயில் விரல் வைத்து எச்சரித்தாள்.
"இங்கே நின்று ஒட்டு பார்க்கணுமா… தப்பும்மா" கிசுகிசுத்தான்.
"அமைதியா இருடா…" நந்தினி பல்லை கடிக்கவும் ரஞ்சன் அமைதியானான். அறையின் உள்ளே சத்யன், குழந்தையுடன் விளையாடினான்… குழந்தையுடன் கொஞ்சினான்… குழந்தையை