(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

விடிந்ததும் விடியாமலும் தங்களை பிடித்து இழுத்து கொண்டு வந்தவனை நண்பர்கள் அனைவரும் வெறியுடன் பார்த்தனர்.

"டேய் ராம் இப்போ எதுக்கு இவ்ளோ காலைல பிடிச்சு இழுத்துட்டு வந்துருக்க எங்களை எல்லாம்?" ஒருவன் கேட்க, "டேய் மணி ஒன்பது ஆச்சு. வா போயி ப்ராக்டிஸ் பண்ணலாம்" என்ற ராமை எல்லோரும் வினோதமாக பார்த்தனர்,

"டேய் இந்த ஹாஸ்டல்ல ஏதாவது பேய் பிராசு இருக்கா? அது எதுவும் அடிச்சிடுச்சா இவனை?? ஏன் இப்படி விநோதமா நடந்துக்கறான்" அவர்கள் தங்களுக்குள் பேசி கொள்ள, அதை எல்லாம் அவன் கண்டு கொள்ளவில்லை. தன்னுடைய லேசர் பார்வையை கொண்டு அந்த வளாகத்தை அலசி கொண்டிருந்தான். அவனின் தேடல் வீண் போகவில்லை. அதோ அங்கே தூரத்தில்...அவளே தான்...எத்தனை தூரத்தில் இருந்தாலும் அவனால் கண்டுபிடிக்க முடியும் அவளை. அவனுடைய நண்பர்கள் திரும்பி பார்க்கையில் ராம் அங்கிருக்கவில்லை.

அந்த காலை பொழுதை அவளை சுற்றுவதிலேயே கழித்தான் என்றே சொல்லலாம். மாலை அவனின் நிகழ்ச்சி முடிந்து அந்த ஆடிட்டோரியத்தை விட்டு அவன் வெளியே வர, பலரும் அவனிடம் அவன் நன்றாக பாடியதாக சொல்லி வாழ்த்தி செல்ல, இவனது பார்வையோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவளை பார்க்கும் போதெல்லாம் அவள் ஏதேனும் ஒரு கும்பலுக்குள் தான் இருந்தாள். இப்போது கூட அங்கே யாரோடோ நின்று பேசி கொண்டிருந்தாள். எப்படியும் நாளை அவளை பற்றி விசாரித்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் ராம்.

"உனக்கு ஓகே தான ராம்??" என்ற நண்பனின் குரலில் திரும்பியவன் "என்ன ஓகே ?" என புரியாமல் கேட்க, "டேய் என்னடா ஆச்சு உனக்கு? நாளைக்கு எல்லாம் வெளிய ஒரு ரவுண்டு போலாம்னு டிசைட் பண்ணிருக்கோம் ஓகேவானு கேட்டா என்ன ஓகே னு கேக்கற?" நண்பர்கள் முறைக்க, "ஓகே ஓகே " என அவர்களை சமாதானப்படுத்தியவன் நாளை இங்கிருந்து கிளம்பும் முன் எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று எண்ணியபடி சென்றான்.

"டேய் சும்மா சுத்தி பாக்கலாம்னு சொல்லிட்டு மூவி டிக்கெட் எப்போ பண்ணுணிங்க" என்ற ராமின் கேள்வியில் ஒட்டுமொத்தமாக எல்லோரும் முறைக்க, அவர்களின் முறைப்பிலேயே தான் தான் கனவு கண்டு அவர்கள் பேசியதை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தவன் "சரி சரி முறைக்காதீங்க. சும்மா கலாய்ச்சேன். எல்லாரும் உள்ள போங்க. இன்னைக்கு ஸ்னாக்ஸ் என் ட்ரீட்." என்றவன் ஸ்னாக்ஸ் கடையை நோக்கி சென்றான். படம் முடிந்து சென்று அவளை பற்றி விசாரிக்க நேரம் கிடைக்குமா? இரவு ஒன்பது மணிக்கு ரயில் நிலையம் செல்ல வேண்டும். அதற்குள் முடியுமா?? என்ற யோசனையுடன் ஸ்னாக்ஸை வாங்கி கொண்டு திரும்பியவனின் கண்களில் பட்டது அந்த காபி ஷாப். அங்கிருந்த ஒரு டேபிளில் தனியாக அமர்ந்திருந்தாள் தமிழ். அவளை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.