(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"நீ அமைதியா இருக்கறதை பார்த்தா அழுதுருக்க. என்னாச்சு???" என்றவனுக்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

"நான் உன் பிரென்ட் தமிழ். என்கிட்டே ஷேர் பண்ணிக்கிட்டா உனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்னு தான் கேட்டேன். உனக்கு சொல்ல விருப்பம் இல்லைனா சொல்ல வேண்டாம். நான் போர்ஸ் பண்ணமாட்டேன். இப்போதைக்கு இந்த மருந்தெல்லாம் எடுத்துக்கோ. அப்பப்போ ராம்கிட்ட டெம்பெரேச்சர் செக் பண்ண சொல்லு. பிவேர் குறையலைனா கால் பண்ணு. இப்போதைக்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்டிருக்கு. சோ நல்லா தூங்கு" என்றவன் இருக்கையில் இருந்து எழ, "தேங்க்ஸ் அசோக்" என்றாள் தமிழ்.

"பிரெண்ட்ஸ்க்குள்ள தேங்க்ஸ் சாரி எல்லாம் தேவை இல்லை. டேக் கேர்" என்றவன் "அப்பறம் இன்னொரு விஷயம் தமிழ்...எனக்கு எல்லாமே தெரியும். உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு தான் நெனைச்சேன். ஆனா சப்போஸ் நீ இப்போ நெனைச்சு வேதனை படர விஷயம் அது ரிலேட்டட்னா நீ என்கிட்டே ஹெசிட்டேட் பண்ணாம ஸர் பண்ணிக்கலாம்னு தான் சொல்றேன்" என்றவன் அங்கிருந்து வெளியே வரவும்,அப்போது தான் வருவது போல வந்தான் ராம்.

"ஹாய் ராம்" ராமை கண்ட அசோக் புன்னகைக்க, "எப்படி இருக்கு தமிழுக்கு??" என்ற ராமின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து அசோக் கிளம்ப, அவர்களின் அறைக்குள் நுழைந்தான் ராம். மருந்துகளின் விளைவினால் உறங்கியிருந்தாள் தமிழ். அவளின் அருகே சென்றவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

கண்களை மூடி உறங்குகையில் கூட அவளின் முகம் ஏனோ சோகமாக இருப்பது போல தோன்றியது. "இன்னைக்கு என்ன நாள்? எனக்கு எல்லாமே தெரியும்னு அசோக் சொன்னானே...அது என்ன? எனக்கு உன்னை பத்தி எதுவும் தெரியலைனு பரத் சொன்னானே? எனக்கு என்ன தெரியல? ஒருவேளை எனக்கு தெரிஞ்சதா நான் நினைச்சுகிட்டு இருக்கறது எல்லாம் தப்பா? ஆனா நான் கண்ணால பார்த்தது காதால கேட்டது எப்படி பொய்யாக முடியும்??? ஒருவேளை எல்லாத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கா?" அவளின் முகத்தை [பார்த்தபடி அமர்ந்திருந்த ராமிற்கு முதன் முதலாக தான் தவறு செய்து விட்டோமோ என தோன்றியது.

நெற்றியில் சில்லென இதமாக படர்ந்தது எதுவோ. தன்னுடைய கையால் அதை தொட முயன்றாள் தமிழ். யாருடைய கை இது??? "அம்மா... அம்மாவுடைய கையா இது???" அம்மாவை பார்க்க வேண்டுமே...கண்ணை திறக்க முயன்றாள். சற்று சிரமமாக இருந்தது. மெல்ல முயன்று கண்ணை திறந்தாள். அந்த அறையில் மெல்லிய வெளிச்சம் பரவி இருந்தது. கண்களை மெல்ல பக்கவாட்டில் திருப்பினாள். அவளின் கண்கள் அகல விரிந்தது.

"எப்படி இருக்கு? " ராமின் குரலில் அது கனவு இல்லை என புரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.