(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"ஒஹ்ஹஹ் காட் காட்....என் டிசைன்ஸ்...." நித்யா கத்த, "ஐ யாம் சாரி...சாரி..." தமிழ் பதற்றத்துடன் சொல்லவும், "சாரி சொன்னா??? இன்னைக்கு இது கிளைண்ட்ஸ்க்கு அனுப்பனும்...சே...." நித்யா மீண்டும் கத்த "சே என்ன தமிழ் இவ்ளோ கேர்லெஸ்ஸா இருப்பியா? " என்ற ராம் அந்த பேப்பேரை கையில் வாங்கி பார்க்க, "இல்லை தெரியாம தான், தலை சுத்தற மாதிரி இருந்துச்சு அதான் கை தவறி பட்டுடுச்சு. சாரி நித்யா" தமிழழுக்கு அழுகை வரும்போல இருந்தது.

"எக்ஸ்கியூஸஸ் சொல்லாத. இவ்ளோ பெரிய பொறுப்பு உனக்கு இங்க கம்பெனில கொடுத்திருக்காங்க...அப்போவே நெனச்சேன். கொஞ்சம் கூட ப்ரொபெஷனல் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத உன்னை இங்க சேர்த்தா இப்படி தான் ஏதாவது தொல்லை வரும்னு...சே" என்ற நித்யா அந்த பேப்பரை துடைக்க, அதே நேரம் உள்ளே நுழைந்த பரத், நித்யாவின் கத்தலை கேட்க நேர, "நித்து அண்ணிகிட்ட சாரி கேளு" என்றபடி உள்ளே நுழைய,

"அவ சொன்னதுல என்ன தப்பு? அவ எதுக்கு சாரி கேக்கணும்?? இன்னைக்கு டெட்லைன் தெரியுமா? இப்போ எல்லாத்தையும் திரும்ப பண்ணனும்...இது எவ்ளோ பேருடைய உழைப்பு தெரியுமா? பிசினஸ் பத்தி தெரிஞ்சிருந்தா இந்த கஷ்டம் என்னனு புரியும்" என்றபடி ராம் அந்த பேப்பரில் இருந்த காபி கரையை துடைப்பதில் கவனம் செலுத்த, அதற்க்கு மேல் அவளால் அங்கே நிற்க முடியும் என தோன்றவில்லை தமிழுக்கு. ஒரு முறை ராமின் முகம் பார்த்தவள் "ஐ யாம் சாரி" என மெல்ல முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

"நித்து இதை டிசைன் டிபார்ட்மென்ட்க்கு கொண்டு போ. எவ்ளோ நேரம் ஆனாலும் பரவால்லை இன்னைக்கு இதை அனுப்பிய ஆகணும். நீ சொன்ன சஞ்செஸ் எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்குல்ல? நீயும் அவங்க கூட சேர்ந்து அதெல்லாம் ஆட் பண்ணிடு" என்று நித்யாவை அங்கிருந்து அனுப்பிய ராம், தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர, அப்போது தான் தன்னையே பார்த்து கொண்டிருந்த பரத்தை கவனித்தான்.

நித்யா பேசியதை தமிழ் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் ராம் அவளுக்கு ஆதரவாக பேசாதது மட்டுமில்லாமல் அவளை திட்டி பேசியது அவளை வருத்தியது. ஏற்கனவே இருந்த மோசமான மனநிலையாலோ என்னவோ இது அவளை இன்னும் அதிகமாக பாதித்தது.

"சொல்லு பரத், என்ன விஷயமா வந்த? ஏதாவது டிஸ்கஸ் பண்ணனுமா?" தன்னுடைய கையில் இருந்த பைலை புரட்டியபடி கேட்டவன் எந்த பதிலும் வராமல் போகவும் நிமிர்ந்து பரத்தை பார்த்தான். அவன் அவனையே பார்த்து கொண்டு அமர்ந்திருக்கவும் கையில் இருந்த பைலை மூடி வைத்தவன், "என்னடா? ஏதாவது ப்ரோப்லேம்மா?" என்றான் பரத்தை பார்த்து.

"அண்ணா, நீ பண்ணுனது ரொம்ப தப்பு...." -பரத்

"என்ன பண்ணுனேன்? எதை தப்புனு சொல்ற?" - ராம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.