தனிமைல உன்னுடைய ஞாபகம் என்னை துரத்தறதை என்னால தடுக்கவே முடியல. ஆனா மறுபடியும் என் முன்னாடி வந்து நின்ன தெரியுமா??? அந்த நாளை என்னால மறக்கமுடியாது. பாட்டி அவங்களுக்கு கேர் டேக்கர் ஒருத்தர் வந்துருக்காங்கனு சொன்னப்போ அது நீயா இருப்பேன்னு கனவுல கூட நினைக்கலை. உன் மேல இருந்த காதல் எல்லாம் போயிடுச்சுனு நினைச்சுட்டு இருந்தப்போ வந்து என் முன்னாடி நின்ன. நீ அன்னைக்கு பேசுனது இப்போ வரைக்கும் எனக்கு கேட்டுட்டே இருக்கு. அதை எப்படி நான் மறக்கறது" அவளின் முகத்தை பார்த்தபடி மனதிற்குள் பேசி கொண்டிருந்தவன் தன்னுடைய செல்பேசியை எடுத்தான். அதில் அவன் லாக் செய்து வைத்திருந்த ஒரு போல்டரை திறந்தான். அதில் எல்லாம் அவளின் புகைப்படங்கள். அந்த இரண்டு நாட்கள் அவளின் ஒவ்வொரு நகர்வையும் அதில் பதிந்திருந்தான். மீண்டும் அவளை பார்த்தான். அப்போது உதடுகளுடன் சேர்ந்து கண்களும் சிரிக்கும். அப்படி அவள் இப்போது சிரிப்பதில்லை என தோன்றியது அவனுக்கு. இதில் நிஜம் எது என புரியாமல் அவன் மனம் குழம்பியது.
தொடரும்
Next episode will be published on 5th Sep. This series is updated weekly on Saturday mornings.