"நானும்தான்… " அவனின் அணைப்பை கண் மூடி ரசித்தவள்…
"அழகான வார்த்தை சொன்னீங்க. ஆத்மாவின் ஸ்பரிசம்… நான் இந்த அகலிகை கதையை படிச்சிட்டு ரொம்பவும் வருத்தப்பட்டிருக்கிறேன். இந்திரன் கௌதம ரிஷி மாதிரி மாய வேடம் போட்டு வந்ததற்கு அகலிகை என்ன செய்வாள். அவளை சபிச்சது தப்புதானே என்று நினைப்பேன். இப்ப புரியுது… அவளால் இந்த ஆத்மாவின் ஸ்பரிசத்தை உணர முடியாமல் போயிருக்கும்… உண்மை காதல் இருந்திருந்தால் வேற்று ஆடவன்னு கண்டுபிடித்திருப்பாள்… அப்படினா கடமை வேறு காதல் வேறு…"
"நீ சொல்லும்மா. நான் சொன்னால் பஞ்சாயத்தாகி விடும்.. உண்மையான காதல் கலங்கரை விளக்கம்போல… கடலில் மூழ்காமல் நம்மை கரை சேர்த்து விடும்."
"கரெக்ட்… எனக்கு என்னை நினைவில்லாத போதும் உங்களை தெரிந்திருந்தது. நான் உங்களை பார்த்த முதல் நாளிலேயே கனவில் வந்து விட்டீர்கள்…" என்று விவரித்தாள்.
"ஓ… அதுதான் மேடம் ப்ளூ ஸ்ட்ரைப்ஸ் பற்றி பேசினீங்களா. இப்ப நமக்குள் எல்லாம் க்ளியர் ஆயிடுச்சுனு நினைக்கிறேன். அடுத்து செய்ய வேண்டியதை ப்ளான் செய்யணும்."
"என்னது.."
"நம்ம கல்யாணம்தான்...உங்க பெரியப்பா செஞ்ச குழப்பத்தை உலகத்திற்கு தெரிவிக்கணும்னு அவசியமில்லை. அவர் உன்னுடைய உயிரை காப்பாற்றியதால் அவரை மாமனாராக ஏற்றுக் கொள்ள முடிவு செய்து விட்டேன்… ஹும்… தங்கதுரையைவிட இவர் எவ்வளவோ நல்லவர்."
பிறகு… அடுத்து வந்த நல்ல நாளில் அருகிலிருந்த அமம்ன கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது… அவர்களுக்கு ஏதோ தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணி அவர்களுடன் பத்து ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்தனர்.
நீங்கள் நினைச்சது கரெக்ட்… பத்துல ஒரு ஜோடியா கல்பியும் மாரப்பனும் இருந்தனர். அவங்களும் ஹாப்பியா இருக்கணும்ல...
அப்பறம்… மனுகுட்டி அவங்க அம்மாவுடைய அன்பு மழையில் நனைய ஆரம்பித்தது. ராஜாவும் ராணியும் இளவரசியுடன் ஹாப்பியா வாழ ஆரம்பிச்சாங்களாம்...
ம்… ரேச்சலான மீராவை அடையாளம் கண்டு கொள்வதில் காதலைவிட தாய்மைதான் முந்திக் கொண்டது என்று நினைக்கிறேன். நான் சொல்வது சரிதானா…?.
(முற்றும்)
டியர் ரீடர்ஸ்,
நன்றி… நன்றி! இந்த தொடரை கவனமாக தொடர்ந்து வந்தவர்களுக்கு மிக்க நன்றி. எப்போதும் போல தங்களுடைய கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த ஆதர்வ்ஜோ, மதுமதி, சாரு, வினோ, ரவை சார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். அப்புறம் தேங்க்யூ… அப்புறம் தமிழ்ஶ்ரீ, ஷாதி… ஃபயாஸ் , மினு, சபரிராஜ், கீர்த்தி, அருனா, நிதில், தீபா ஆகியோருக்கும் ரொம்ப தேங்க்ஸ்.
இந்த தொடரை படித்த அனைவருக்கும் நன்றி. முகநூல் வாசிப்பாளர்களுக்கும் நன்றி!
இந்த தொடரை பப்ளிஷ் செய்து ஊக்குவித்த சில்சீ டீமிற்கும் மிக்க நன்றி.
சீக்கிரமாக மீண்டும் சந்திக்கலாம்!
அன்புடன்,
சாகம்பரி
முற்றும்