(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"சரி கிளம்பலாம்!" என்று அவள் எழுந்தாள் .

அஜய் அம்மாவை பார்த்தான், அவள் முக சிவப்பு அவளின் வெட்கமா கோவமா என்று அறியாமல் இல்லை.

"என்ன தனம் எங்கே போக போறோம் இப்போ?" என்று கேட்டான் அப்துல்.

"எனக்கு ஆக்சுவலா கொஞ்சம் வேலை இருக்கு, ஆனா அஜய் நீ என்ன பண்ண போற?" என்று தனம் கேட்கவும்,

"தனம், நான் உன்னோட பேசணும் நிறைய பேசணும்,எப்போ உனக்கு டைம் கிடைக்கும்? உன் அப்பாயிண்ட்மெண்ட் எப்போ கிடைக்கும்?" என்று அவளை கிண்டல் செய்து விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் நடந்துக் கொண்டிருந்த போது இந்த பேச்சு வார்த்தை நடந்து  கொண்டிருந்தது.

அஜய் கொஞ்சம் பின் வாங்கினான், அவர்கள் பேசிக்கொள்ளட்டுமென்று.

"ஆது, நான் அஜயோட இருக்கேன், நான் ஒரு சாப்பிட்வேர் கம்பெனியில வேலை பண்றேன், சிங்கிங் என்னோட  அடிஷனல் ஜாப்."

"சரி நானும் உங்களோட வந்து இருக்கேன், கொஞ்சம் பேசணும் தனம். "

"ஆதூ யு ஆர் மை பிரென்ட், எனக்கு எப்போ டைம் கிடைக்கறதோ நான் சொல்றேன், அப்போ வீட்டுக்கு வா, நாம பேசலாம், இப்பவே பேச என்ன அவசரம் சொல்லு?

நாம இத்தன நேரம் பேசிட்டுதானே இருந்தோம் அப்புறம் என்ன ?" என்று தனம் கேட்கவும்.

"ப்ளீஸ் தனம் ஏதாவது சொல்லி என்னை அவாய்ட் செய்யாத!"

"நான் எங்க உன்ன அவாய்ட் செய்ஞ்சேன், நான் வொர்க் பண்றேன் எனக்கு டைம் இல்ல, அதான் அப்படி சொன்னேன். உன்ன நான் அவாய்ட் எல்லாம் பண்ணல ஆதூ!"

"சரி, நீ உன் வேலையை பார்த்துட்டு வீட்டுக்கு வா நான் அஜய் கூட போறேன்!"

இதுக்கு அவளால் ஒன்றும்  சொல்லமுடியவில்லை.. அஜய்யை பார்க்க திரும்பினாள், அவன் அங்கே அவர்களோடு இல்லை , அவன் எங்கே என்று திரும்பி தேடினாள். கொஞ்சம் தூரத்தில் அவன் மெதுவாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

 

அவர்களுக்கு தனிமை கொடுக்கும் எண்ணத்தோடு அவன் மெதுவாக வருவது புரிந்தது, அஜய்க்கு கை ஜாடை காண்பித்து அவனை சீக்கிரம் வருமாறு கூறினாள்.

அவன் வந்து சேரும்வரை அங்கேயே காத்திருந்தாள், அவன் புன்னகையுடன் வந்து அவர்களுடன் சேர்ந்தான் "அம்மா நீ அப்பாவோட ஆபிசுக்கு போயிடேன், எனக்கு கொஞ்சம் ரெஃபாரென்ஸ் எடுக்கணும், நான் போகணும்."

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.