தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 11 - பிந்து வினோத்
மஞ்சுவின் குரலில் வந்த மாற்றத்தை உணர்ந்துக் கொண்ட மனோஜ் உடனடியாக பதில் சொல்லாமல் சிறிய இடைவெளி கொடுத்துப் பேசினான்.
“pbs, நீ டென்ஷன் ஆகாதே! ஷண்முகம் உன் கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு தனியா கேட்டுக் கிட்டான். அதான் சொல்லலை... இதெல்லாம் வேண்டாம் PBS! நீ போன வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வந்திரு...”
“உங்க அண்ணா எதுக்கு என் கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னார்? அதைக் கூடவா நீங்க கேட்கலை? அப்படியே அவர் சொன்னா சரின்னு தலை ஆட்டுவீங்களா???”
டீச்சர் போல மஞ்சு மிரட்ட, மனோஜ் அமைதியாகவே பதில் சொன்னான்!
“அதெப்படி கேட்காம இருப்பேன் pbs! கேட்டேன்... அவன் என்ன சொன்னான்னா...”
“என்ன???”
“அண்ணி என் அண்ணன் தவிர எங்க எல்லோர் கிட்டேயும் தேவைக்கு மட்டும் தான் பேசுவாங்க. நீயும் அவங்களும் தான் க்ளோஸ். ஃபிரென்ட்ஸ் மாதிரி ரொம்ப க்ளோஸ்... அதனால வீட்டு சண்டை பத்தி தெரிஞ்சா நீ அவங்க கிட்ட சரியா பேசாம போயிடுவேன்னு அவன் நினைச்சிருக்கான்...”
மஞ்சு அமைதியாக இருந்தாள்!!!
ஷண்முகத்தை எந்த ‘கேட்டகரி’யில் சேர்ப்பது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது! மனைவி விருப்பதிற்காக அம்மாவை தனியாக விட்டு செல்ல மாட்டேன் என்று சொல்பவன். அதே மனைவிக்காக தன் தம்பியிடம் இப்படி சொல்லி இருக்கிறான்..!!!!???
இவன் வினோ ஸைடா? அத்தை ஸைடா? யார் ஸைட்???
மஞ்சு மும்முரமாக யோசித்துக் கொண்டிருக்க, மனோஜ் அவனாகவே பேசினான்...
“ஜோ உன் கிட்ட என்ன சொன்னான்னு தெரியலை... அண்ணி பத்தி நான் உனக்கு சொல்ல தேவை இல்லை... அவங்க நம்மளைப் பத்தி சொன்னது அப்போ இருந்த கோபத்துல சொன்னது... அவங்க லிட்ரல் அர்த்தத்தில சொல்லலை...”
“அப்படின்னு உங்களுக்கு யார் சொன்னது??? உங்க அண்ணாவா?”
“ஆமா அவன் தான் சொன்னான்... வேற யார் வழியாவது நான் தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி அவனே சொல்றது சரின்னு சொல்லி சொன்னான்... அம்மா கூட விபரமா சொல்லலை... பேசுறதில்லைன்னு மட்டும் சொன்னாங்க... எது எப்படியோ, இது அவங்க இரண்டுப் பேர் சண்டை... நமக்கு இதெல்லாம் வேண்டாம்...”
“என்ன இப்படி சொல்றீங்க மனோஜ்? உங்க அண்ணா சமையல்ல என்ன எவ்வளவு ஹெல்ப் செய்திருக்கார் தெரியுமா??? ஏன் உங்களுக்கு மட்டும் வேற யார் வழியாவது தெரிய