தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 20 - முகில் தினகரன்
“இதென்னய்யா குடும்பமா இல்லை...கூத்துப் பட்டறையா?...“ரெண்டு நாளா மாப்பிள்ளை வீட்டுக்கு வரலை!”ன்னு சொல்லுறீங்க!...அவரைத் தேட எந்த ஏற்பாடும் பண்ணலை!...கேட்டா... “அவரே திரும்பி வந்திடுவார்”ன்னு சொல்றீங்க?...எனக்கென்னமோ ஏதோ விஷயம் நெருடலாய்த் தெரியுது,...உங்க மகன் உண்மையிலேயே ஒழுக்கமானவன்தானா?”
தன் மீசை முடிகள் தெறித்துப் போய் விழுமளவிற்கு உச்ச ஸ்தாயில் கத்தினார் ராமலிங்க பூபதி.
“அவசரப் படாதீங்க...சம்மந்தி!...வந்திடுவான்!...இந்த மாதிரி அப்பப்ப ரெண்டு நாள் மூணு நாள் வெளியூரு போயிடுவான்...அப்புறம் அவனே வந்திடுவான்” சமாளித்தார் பொன்னுரங்கம்.
அதுவரையில் அமைதியாய் நின்றிருந்த தனசேகரின் ராமலிங்க பூபதியின் மனைவி சொர்ணம், “த பாருங்க!...எங்களால ஊருக்கு பதில் சொல்லி மாளலை!....பொண்ணு கழுத்துல தாலி ஏறி ஏழு மாசமாச்சு...இன்னும் புகுந்த விட்டு வாசற்படியையே மிதிக்கலை!...எங்க எதிர்த்தாப்புல் நின்னு பேசக் கூட பயப்படற நாயெல்லாம் இன்னிக்கு எங்களைப் பார்த்துக் கேலி பேசுது!....ஒழுங்கா..முறையா...உங்க பையனை வந்து எங்க பொண்ணைக் கூட்டிட்டுப் போய் குடித்தனம் பண்ணச் சொல்லுங்கோ...இல்லை பஞ்சாயத்தைக் கூட்டி அறுத்துக்கச் சொல்லுங்க!...இப்படிக் கண்ணாலம் கட்டிக்கிட்டுத் திரும்பிப் பார்க்காம இருக்கறது என்ன பொழப்பு?” தன் பங்கிற்கு கூவினாள்.
“ஹும்..எத்தனையோ பெரிய பெரிய இடமெல்லாம் வந்திச்சு...எங்க தலையெழுத்து அதையெல்லாம் வேண்டாம்!னுட்டு இங்க வந்து மாட்டிக்கிட்டு முழிக்கறோம்” தலையிலடித்துக் கொண்டு சொன்னார் ராமலிங்க பூபதி.
அவர்களை என்ன சொல்லி சமாளிப்பது?...என்று புரியாமல் பொன்னுரங்கம் தலை குனிந்து நிற்க,
கணவரின் தர்ம சங்கடத்தைக் கண்டு மனம் நொந்து போன சுந்தரி, “இங்க பாருங்க...தப்பு எங்க மேலே இல்லை!...உங்க மேல்தான்...உங்க வீட்டுல இருக்கற அந்த ஆத்தா மேல்தான்!...கட்டிக்கப் போற பொண்ணுக்கு கல்யாண பத்திரிக்கை வைக்க என் மகன்