அவன் தொடர்ந்து பேசுவதற்கு முன், மஞ்சு அவனின் தோளில் உரிமையுடன் தலை சாய்த்துக் கொண்டாள்.
“வீடு பக்கத்துல வந்திருச்சு மனோஜ். இப்போ சீரியஸா பேசி மூட் ஸ்பாயில் செய்யாதீங்க. நீங்க என் பக்கத்துல இருக்க ஒவ்வொரு செகன்டையும் ரசிச்சு அனுபவிக்க ஆசைப்படுறேன். எனக்கு மட்டும் உங்க கூடவே இருக்கனும்னு ஆசை இல்லையா என்ன? இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கொஞ்சம் டைம் கொடுங்க. நானே வேற வேலை தேடிட்டு உங்க பக்கத்துல வரேன்.”
மஞ்சுவின் மனதை வருத்தப் படுத்த விருப்பம் இல்லாமல், பிடித்தம் இல்லையென்றாலும், தன் உதடுகளை இறுக மூடிக் கொண்டான் மனோஜ்.
தொடர்ந்து வந்த நிமிடங்களை கணவன் மனைவி இருவருமே தங்களின் மன விருப்பம் போல காதல் கலக்க செலவிட்டார்கள்...
நள்ளிரவு கடந்தப் பின்பும் கூட இருவரும் விழித்து தான் இருந்தார்கள்... மனோஜின் மார்பில் தலை வைத்து படுத்திருந்த மஞ்சு தலையை உயர்த்தி மனோஜின் கண்களை நேராக பார்த்தாள்.
“என்ன pbs?”
“என் மேல உங்களுக்கு கோபமா?”
“கோபம் கிடையாது மஞ்சு. எனக்கு உன்னை பத்தி கவலை தான் இருக்கு. நீ சொல்றது சரி, நான் உனக்கு செக்யூரிட்டி கொடுக்குறேன்னு வீட்டுக்குள்ளே வச்சு பூட்டி வைக்க முடியாது. அது சரியும் இல்லை... இருந்தாலும் நீ இப்படி எங்கேயோ இருக்காம, என் பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும்... நமக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆயிடுச்சு pbs... குழந்தை பத்தியும் நாம் யோசிக்கனும்... நான் யோசிக்காம போனாலும் அம்மா பேசும் போதெல்லாம் இன்டைரக்ட்டா ஏதாவது கேட்குறாங்க...”
“எங்கம்மாவை பத்தி சொல்லவே வேண்டாம்... போன் எடுத்தாலே லெக்ச்சர் தான்... அவங்க