அவளின் வட்ட முகமும், அழகாய் விரிந்திருந்த விழிகளும், சிவந்திருந்த கன்னங்களும், ஒயிலாக இருந்த உதடுகளும் அவனை வா வா என அழைத்தன...
“உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு பௌர்ணமி நிலா தான் ஞாபகத்துக்கு வருது... பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா...” என மெல்ல பாடியவன்,
“என்னோட பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா...” என்றான் காதலுடன்...
மஞ்சு சிரிக்க, மனோஜின் களைப்பெல்லாம் காணாமல் போனது... காதல் ஹார்மோன் பெருகி ஓட சிரித்த அவளின் இதழ்களை முரட்டுத்தனமாக தன் வசமாக்கிக் கொண்டான்.
ஞாயிறு மாலை,
“பத்திரமா இரு pbs... எதுவா இருந்தாலும் உடனே போன் செய்...” எனத் தொடங்கி பல ரகமான பாதுகாப்பு அறிவுரைகளுடன் மனமில்லாமல் கிளம்பிச் சென்றான் மனோஜ்...
அவன் கிளம்பி போன பிறகு உலகமே அமைதியாக போய் விட்டதாக மஞ்சுவிக்கு தோன்றியது...
அவள் இங்கே தனியாக இருப்பதில் மனோஜிற்கு விருப்பம் இல்லை என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது... அதற்காக அவளை கட்டாயப் படுத்தாமல் அவளின் விருப்பத்திற்கு இன்னொரு தடவை மதிப்பு கொடுத்தவனை நினைத்து மனம் நெகிழ்ந்தது...
லேப்டாப்பை திறந்து ஈ-மெயிலை செக் செய்தாள். கௌரவிடம் இருந்து வேலைத் தொடர்பான ஈமெயில் வந்திருந்தது...
அதை பார்த்ததும் முகத்தை சுழித்த மஞ்சு, சீக்கிரமே வேறு வேலை தேடிக் கொண்டு சிகாகோ செல்வது என்று முடிவு செய்துக் கொண்டாள். அதற்காக அப்போதே தன்னுடைய ‘ரெசூமே’ தயார் செய்யத் தொடங்கினாள்.