தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 02 - தேன்மொழி
கேஸ் ஃபைல் - 01 - குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...!
தேன் அபினவ் சொன்ன வீட்டை கண்டுபிடித்து அடைந்தப் போது, அந்த வீட்டின் வெளியே சின்னக் கூட்டம் வேடிக்கை பார்த்து நின்றுக் கொண்டிருந்தது.
தேனின் காரை பார்த்ததும் அவசரமாக வந்து கதவை திறந்து விட்டான் அபினவ்.
"தேங்க்ஸ் அபினவ். இதுவரைக்கும் என்ன டீடெயில்ஸ் கலக்ட் செய்திருக்கீங்க?" என விசாரித்தான் தேன்.
"பணத்துக்காக நடந்த கொலை போல இருக்கு சார். வீட்டில பொருள் எல்லாம் இறைஞ்சு கிடக்குது. அஞ்சு லட்சம் ரூபாய் திருட்டு போய் இருக்கு, நிறைய நகையும் காணாமல் போயிருக்கு!"
"ம்ம்ம்ம்..."
"அந்த லேடியை சேர்ல கட்டிப் போட்டு, வாயில துணியை வச்சு அடைச்சு, கழுத்தை அறுத்து கொலை செஞ்சுருக்காங்க. எத்தனை பேருன்னு சரியா தெரியலை."
"ம்ம்ம்ம்... யாரு கொலையை ரிப்போர்ட் செய்தது?"
"இந்த வீடு எம்.கே க்ரூப் ஓனர் முத்துக் குமாருக்கு சொந்தமானது சார். அவருடைய மனைவி தான் இப்போ இறந்து போன இந்த இந்திரா. முத்துகுமார் ஜாகிங் முடிச்சிட்டு திரும்பி வந்தப்போ பாடியை பார்த்திருக்கார்."
கொலையை பற்றி முதலில் தெரிந்துக் கொண்டு போலீசுக்கு தகவல் சொன்னது இந்திராவின் கணவன் முத்துக் குமார்!
தேன் தன்னுடைய மூளையின் ஒரு ஓரத்தில் இந்த கேசுக்கென ஒதுக்கப் பட்டிருந்த இடத்தில் அந்த விபரத்தை சேமித்து வைத்தான்.
“ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ், ஃபோரேன்சிக் எல்லாம் ஸ்டார்ட் ஆயாச்சா? போட்டோஸும் எடுக்க