சொல்லுங்க.”
"யெஸ் சார்! உங்களுக்காக அன்-டச்டா வச்சிருக்கேன். ஃபோரன்சிக் மக்களுக்கு இன்பார்ம் செய்துட்டேன். இப்போ வந்திருவாங்க."
"குட் ப்ரோ-ஆக்டிவ் திங்கிங் அபினவ்."
"தேங்க் யூ சார்."
“வீட்டுல ப்ரேக் இன் ஆகி இருக்கா? கதவு, ஜன்னல் எல்லாம் செக் செய்தீங்களா?”
“நான் பார்த்த வரைக்கும் அது போல எதுவும் தெரியலை, சார். முத்துக்குமார் வந்தப்போ கதவு உள்ளே லாக் ஆகி இருந்ததா சொன்னார்.”
“ஐ ஸீ! எம்.கே க்ருப் என்பது என்ன கம்பெனி, அபினவ்? என்ன செய்றாங்க?"
"புது புது மெடிசின் கண்டுப்பிடிக்க ஆராய்ச்சி செய்றாங்க சார். இங்கே மதியூர்ல ஆரம்பிச்ச கம்பெனி அது."
"ஓகே! இந்த வீட்டில இருக்கவங்களைப் பத்தி வேற என்ன தெரிஞ்சது?
"இந்த வீட்டில முத்துக்குமாரும், அவர் மனைவியும் மட்டும் தான் இருந்திருக்காங்க சார்."
"ஓஹோ! அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி எத்தனை வருஷமாச்சு?"
"அஞ்சு வருஷம் ஆகுது சார். முத்துக்குமாருடைய பேரண்ட்ஸ் பக்கத்திலேயே வேற ஒரு பங்களாவில் இருக்காங்க."
"பக்கத்திலேயே இருக்காங்களா??? ஏன் தனியா இருக்காங்க?"
"வழக்கமான மாமியார் மருமகள் சண்டை தான் காரணம்னு முத்துக்குமார் சொல்றார்.