"எந்த வித்தியாசமும் தெரியலை?"
"இல்லை இன்ஸ்பெக்டர். அது அவளுடைய எக்சர்சைஸ் டைம். நான் வீட்டில இருந்து கிளம்பினப் போது அவள் எக்சர்சைஸ் செஞ்சுட்டு இருந்தாள்."
முத்துக்குமார் அதை சொல்லி விட்டு கேவி கேவி அழுதான்! அவன் கண்களில் இருந்து நீர் கொட்டியது!
இது பொய்யான அழுகை இல்லை! உண்மையான வருத்தம்!
"ஐ ஆம் சாரி, முத்துக்குமார். ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ப்!"
"இல்லை, ஐ ஆம் சாரி, இன்ஸ்பெக்டர்" என்ற முத்துக்குமார் கண்களை துடைத்துக் கொண்டான்.
"ப்ளீஸ் ப்ரோசீட்! அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க."
"நானும் ஜமாலும் ஜாக் செய்ய ஆரம்பிச்சப்போ இந்து எனக்கு போன் செய்தா. யாரோ இரண்டுப் பேர் சந்தேகப் படுற மாதிரி வீட்டு காம்பவுண்ட் பக்கத்தில நிக்குறாங்கன்னு சொன்னாள்."
"இன்ட்ரஸ்டிங்! வேற என்ன சொன்னாங்க அந்த ஆளுங்களை பத்தி?"
"பார்க்கவே பயமா இருக்கு! உயரமா தடியா இருக்காங்கன்னு சொன்னாள். நான் அவளை சமாதானப் படுத்தி சீக்கிரம் வந்திடுறேன்னு சொல்லி காலை கட் செய்தேன்."
"ஏன் அப்படி செஞ்சீங்க, வீட்டுக்கு போய் பார்த்திருந்திருக்கலாமே?"
"இந்து எப்போதும் இப்படி தான் பிஹேவ் செய்வா இன்ஸ்பெக்டர். அவளுக்கு பயம் அதிகம்.