வேண்டிய அவசியம் என்ன?" என யோசிப்பதுப் போல பேசினான் தேன்.
"மே பீ இந்திரா சத்தம் போட்டிருக்கலாம், சார்!" என்றாள் அபினவ்.
"இருக்கலாம்! பக்கத்தில யாருக்காவது ஏதாவது சத்தம் கேட்டிச்சான்னு விசாரிங்க!"
"ஓகே சார்."
"வாங்க, நானும் முத்து குமார் கிட்ட ஒருத் தடவை பேசிடுறேன்," என சொல்லி நடந்த தென்றல்வாணன் கதவின் அருகே வந்ததும் நின்று அதை கவனத்துடன் பார்த்தான்.
அபினவ் சொன்னதுப் போலவே கதவில் வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. கட்டாயப்படுத்தி திறந்ததற்கோ, சாவியில்லாமல் திறக்கப் பட்டதற்கோ எந்த தடயமும் இல்லை!
அதைப் பற்றி யோசித்துக் கொண்டே வாசல் படி அருகே சென்றான் தேன்.
*************
முத்துக்குமார் இப்போதும் அழுதுக் கொண்டிருந்தான்.
"இவர் க்ரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன். உங்க கிட்ட விசாரணை நடத்த..." என அபினவ் முத்துக்குமாரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே,
"மனசாட்சி இல்லையா உங்களுக்கு? அவன் உயிரா நினைச்சிருந்த மனைவியை இழந்துட்டு அழுதுட்டு இருக்கான், இப்போ வந்து விசாரணை, மண்ணாங்கட்டின்னு சொல்லிட்டு தொல்லை பண்ணுறீங்க!" என்று கோபமாக பேசிய பெரியவரை கூர்மையாக நோக்கினான் தேன்.
"நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று அவரிடமே கேட்டான்.