அவ தனியா இருக்க கூடாதுன்னு நான் ஆபிஸ் போற டைம்ல வேலையே இல்லைனாலும் ஒரு வேலைக்காரியை அப்பாயின்ட் செய்திருக்கேன்."
"ஓகே... அப்புறம் காலையில என்ன ஆச்சு?"
"நான் ஜாகிங் முடிச்சிட்டு வந்தப்போ மணி ஆறே முக்கால் கிட்ட இருக்கும். வாசல் கதவை தட்டினேன் சத்தமே இல்லை. இந்துக்கு கால் செய்தேன் அவள் அட்டன்ட் செய்யலை. அவள் சில சமயம் எக்சர்சைஸ் முடிச்சிட்டு சின்ன கோழி தூக்கம் போடுவா. இன்னைக்கும் அப்படின்னு நினைச்சு, என்னோட சாவியை தேடினேன். அது பாக்கெட்டில் இல்லை. கார் சாவி தான் இருந்தது."
"அப்புறம்?"
"நான் ஆபிசிலேயே வீட்டு சாவியை வச்சுட்டு வந்தது ஞாபகம் வந்தது. கார் எடுத்துட்டு ஆபிஸ் போய் சாவி எடுத்துட்டு வீட்டுக்கு வந்து திறந்துப் பார்த்தா... பார்த்தா..."
"போதும் முத்துக்குமார். ரிலாக்ஸ்! நீங்க வீடு வந்தப்போ வீடு பக்கத்தில வித்தியாசமா யாரையாவது பார்த்தீங்களா? வேற ஏதாவது வித்தியாசமா தெரிஞ்சதா?"
"வித்தியாசமா எதுவுமில்லை. நான் வரும் போது ஆப்போசிட் டைரக்ஷனில் ஒரு வண்டி போச்சு. என்ன வண்டின்னு தெரியலை."
"ஓகே."
"இந்த பொருட்களை பாருங்க, இதில ஏதாவது உங்களுடையதா?"
தேன் காட்டிய இடத்தில், அபினவ் பத்திரப்படுத்தி இருந்த ஷூ, ஜாக்கட், கிளவ்ஸ், கத்தி மற்றும் சிகரட் பாக்கட் இருந்தது.
"இந்த ஷூ என்னுடையது! இடது காலில சின்ன ஸ்ட்ரெயின் இருப்பதால் நான் அதை யூஸ் செய்யலை. மத்தது எல்லாம் என்னுடையது இல்லை."