கல்யாண வேலைன்னு பிஸியா இருந்தான். இப்போ லீவ் எடுத்திருந்தாலும் காலையில ஆபீஸ் போயிட்டு அஞ்சு மணிக்கு மேல தான் வரான். மஞ்சு, இனிமேல் நீ தான் இதெல்லாம் அவன் கிட்ட சொல்லனும். முன்னாடி தனியா இருந்தான், நேரம் காலம் பார்க்காம வேலை செய்தான். இனிமேலும் அப்படி இருக்க முடியுமா? டைமுக்கு வேலை செய்ய சொல்லு!”
மஞ்சு நல்ல மருமகளாக தலையை ஆட்டி வைத்தாள்! ஆனால் மனதிற்குள் கடுப்பாக இருந்தது!
ஓரளவிற்கு பெட்டியில் பொருட்களை நிரப்பி, எடையும் போட்டு பார்த்ததும், காற்றாட நடக்கிறேன் என்று பொய் சொல்லி மாடிக்கு வந்தாள். அங்கே இருந்த சுவற்றில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
யாரும் இல்லாமல் தனியாக அமர்ந்திருக்க அவளுக்கு பிடித்திருந்தது! ஒருவரும் இல்லை என்றால் எப்போது குழந்தை பெற்றுக் கோலப் போகிறாய் என்று யாரும் கேட்க மாட்டார்களே!!! அபப்டி என்ன தான் இவர்கள் அனைவருக்கும் அவள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமோ! அம்மா தொடங்கி, தொலை தூரத்து சொந்தம் வரை அனைவருமே அதை தான் பேசினார்கள்!
இதெல்லாம் போதாதென்று இனி மனோஜை வேறு அவள் மாற்ற வேண்டுமாம்!!
மஞ்சுவிற்கு அலுப்பாக இருந்தது!!!!
மனதை சீர் செய்ய, சுற்றி முற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்!
அரை மணி நேரம் சென்றிருக்கும், மாடிக்கு போனுடன் வந்த சாதனா, மஞ்சு கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து வந்த சிரிப்புடன் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
“என்ன அக்கா, ரொம்ப சோகமா இருக்க! உன்னை யாரு கல்யாணம் செய்துக்க சொன்னது? கல்யாணம் செய்தா இப்படி தான்!” என்றாள் சாதனா கிண்டலாக.