மஞ்சு உடனே மறுத்து எதுவும் சொல்லவில்லை!
“என்ன உலக அதிசயமா வாயை மூடிட்டு இருக்க??”
“எனக்கும் சேர்த்து நீ அதிகமா பேசுறீயே, அதனால தான்! என்னவோ நீ கல்யாணமே செய்துக்காம இருக்க போற மாதிரி பேசுறீயே, அடுத்து உனக்கு தான்! ரெடியா இரு!”
“அதைப் பத்தி எல்லாம் நான் ப்ளான் செய்துட்டேன் மஞ்சு. இப்போதைக்கு உடனே கல்யாணம் செய்துக்குறதா இல்லை. நான் கொஞ்ச நாள் ஜாலியா இருந்துட்டு, மெதுவாகவே என் தலையில மண்ணை அள்ளிக் கொட்டிக்குறேன்!”
சாதனா திருமணத்திற்கு சொன்ன மேற்கோளை மஞ்சுவால் தவறென்று சொல்ல முடியவில்லை!
“ப்ச், அதெல்லாம் நடக்காது சது! அம்மா, உன்னை விட மாட்டாங்க!”
“நான் அம்மா மட்டும் இல்லை அப்பா கிட்டேயும் சொல்லிட்டேன். நான் ஒன்னும் அக்கா இல்லையே! எனக்கு ரூட் க்ளியர் செய்ற பொறுப்பு எல்லாம் கிடையாது! இருந்தாலும் எதுக்கும் உதவும்னு பெரிய இடத்து ரெகமேண்டேஷனும் பிடிச்சு வச்சிருக்கேன்.”
“அது யாரது?”
“வேற யாரு உன்னோட மனோஜ் தான்! அத்தான் கிட்ட எனக்காக பேச சொல்லி இருக்கேன். அவரும் எனக்கு முழுசா பிடிச்சா தான் கல்யாணம், இல்லைனா அம்மா, அப்பா கிட்ட பேசி எனக்காக சப்போர்ட் செய்றேன்னு ப்ராமிஸ் செய்திருக்கிறார்!”
“யாரு மனோஜ்? அவர் வந்து உனக்காக பேசுறப்போ, உனக்கு கல்யாணம் ஆகி குழந்தையே பிறந்திடும்!” என்றாள் மஞ்சு சிரிப்புடன்.