அவர்களுக்கே அவர்களுக்காய் ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசை மஞ்சுவின் அடி மனதில் எழுந்து, மெல்ல மெல்ல விருட்சமாய் வளர்ந்துக் கொண்டிருந்தது!!!
அமுதா தினம் தினம் தன் மகளின் போட்டோக்களை வித விதமான போஸ்களில் எடுத்து ஈமெயில் அனுப்பிக் கொண்டிருந்தாள்! அந்த குழந்தையின் கள்ளம் கபடமில்லாத சிரிப்பை பார்க்கும் போதெல்லாம் மஞ்சு தன் பாட்டில் கற்பனையில் ஆழ்ந்து விடுவாள்... அவளுக்கும் மனோஜிற்கும் குழந்தைப் பிறந்தால் எப்படி இருக்கும்?
மகனாக இருந்தாலும், மகளாக இருந்தாலும், மனோஜ் போல இருக்க வேண்டும்! அந்தக் குழ்ந்தையை கண்ணின் கருமணியாக வளர்க்க வேண்டும்... கொஞ்ச வேண்டும்... இப்படி ஏதேதோ ஆசைகளும், எண்ணங்களும் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது...!
பொதுவாக மற்ற நாட்களில் மனோஜிடம் நேரடியாகவே தன் ஆசையை அவள் பகிர்ந்திருப்பாள்... ஆனால், இப்போது அப்படி செய்யாமல் தன் ஆசைகளை மனதுக்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தாள்.
மனோஜ் குழந்தைப் பற்றி இப்போது யோசிக்க வேண்டாம் என்று சொன்னப் பிறகு, மீண்டும், மீண்டும் அவனிடம் சென்று அதைப் பற்றியே பேசி தொல்லை செய்ய அவளுக்கு மனம் வரவில்லை!
அதும் முன்பு அவன் குழந்தை வேண்டும் என ஆசைப் பட்டப் போது வேலையை காரணமாக சொல்லி மறுத்தவள் அவள் தானே...!!!!
மனதில் ஓடிய எண்ணங்களை சொல்லாமல், அவள் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருக்க, மனோஜ் அவளை அணைத்தப் படி தூங்கிப் போனான்!
அவனை அப்படி பார்க்கும் போது அவளுக்கு அவனுமே சிறுக் குழந்தையாக தான் தெரிந்தான்!
“நீங்க தான் என்னோட குட்டிப் பாப்பா!” என்று சொல்லி அவனின் முகத்தில் முத்தமிட்டவள்,