அதைப் பற்றி அவள் யோசித்துக் கொண்டிருந்தப் போது, அழைப்பு மணியை யாரோ பொறுமை இல்லாமல் மீண்டும் மீண்டும் அடித்தார்கள்!
இந்த நேரத்தில் யார்? என்ற கேள்வியுடன் கதவை திறந்தவள், மனோஜ் நிற்பதை பார்த்து அதிர்ந்துப் போனாள்!
கதவை நன்றாக திறந்து வழி விட்டவள்,
“என்ன மனோஜ், அதிசயமா சீக்கிரம் வந்துட்டீங்க? ஒன்னும் சொல்லவே இல்லையே??” என்றுக் கேட்டுக் கொண்டிருக்க, மனோஜ் அவளுக்கு பதில் சொல்லாமல் வீட்டினுள் சென்றான்.
கதவை மீண்டும் தாளிட்டு விட்டு அவன் பின்னே சென்றாள் மஞ்சு.
“மனோஜ்?”
அவனின் முகம் சரியாக இல்லை என்பதை அப்போது தான் கவனித்தாள்.
“என்ன மனோஜ்?”
“ப்ச்...” என்று மட்டும் அலுத்துக் கொண்டான் மனோஜ்.
நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் அருகே சென்று அவனை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவள்,
“என்ன மனோஜ்? என்ன ஆச்சு?” என்று மென்மையாக வினவினாள்!
“ப்ச்... அந்த ப்ரோமொஷனை எனக்கு கொடுக்கலை மஞ்சு! அமித்க்கு கொடுத்துட்டாங்க! இந்த ப்ராஜக்ட் இவ்வளவு க்ரோ ஆக நான் எவ்வளவு செய்திருப்பேன், இருந்தும் எந்த ரீசனுமே இல்லாம என்னை விட ஜூனியருக்கு ப்ரோமோஷன் கொடுத்திருக்கான்! அதும் எனக்கு தரேன்னு சொல்லி முடிவான ப்ரோமொஷனை இப்போ ஈஸியா தர முடியாது போடான்னு