தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 04 - யாஷ்
நியூயார்க் விமான நிலையத்தில் தெரிந்த பிரமாண்டம் ஆதித்யாவை வாயடைத்துப் போகச் செய்தது. பெரியதாய், மக்கள் நடமாட்டம் நிறைந்ததாக இருக்கும் என்று நினைத்திருந்தான். ஆயினும் இந்த அளவிற்கு பெரிதாக, இவ்வளவு மக்கள் இருக்கும் இடமாக இருக்கும் என்று அவன் நினைக்கவே இல்லை!
அவன் அயர்ந்து நின்ற நேரத்தில், அவனுடன் விமானத்தில் பயணமானவர்கள் வேக நடையுடன் முன்னாள் போவதை கவனித்தான். ஆதித்யாவும் அவர்களை தொடர்ந்து நடந்தான்.
விசா, பாஸ்ப்போர்ட் சோதனை முடிந்ததும் அவனுடைய பெட்டியை எடுக்க சென்றான்.
“ஆதி? நீ இங்கே என்ன செய்ற?”
எங்கிருந்தோ திடீரென்று கேட்ட தமிழ் குரல் ஆதித்யாவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதே சந்தோஷத்துடன் பார்த்தால் காஷ்யாப்பும், ஸ்ரீகரும் ஒன்றாக நின்று இருந்தார்கள்.
“காஷ்யாப், நீயும் இப்போ தான் வரீயா?” என மகிழ்ச்சியுடனே வினவினான் ஆதித்யா.
எனினும் காஷ்யாப்பின் முகத்தில் அந்த மகிழ்ச்சிக்கான பிரதிபலிப்பு கிடைக்கவில்லை.
“நீ இங்கே என்ன செய்ற, ஆதி?” என திரும்ப அதே கேள்வியைக் கேட்டான் காஷ்யாப்.
உனக்கெல்லாம் இங்கே என்ன வேலை? எனும் ரீதியில் ஒலித்த அந்த கேள்வி ஆதித்யாவிற்கு காஷ்யாப்பின் மனநிலையை காட்டியது.
“நீ வந்திருக்க அதே கான்டெஸ்ட்க்காக வந்திருக்கேன் காஷ்யாப்,” என அமைதியான குரலில் பதிலளித்தவன், அப்படியே ஸ்ரீகர் பக்கம் கவனத்தை திருப்பி.
“ஹலோ ஸ்ரீகர்! எப்படி இருக்கீங்க? உங்களை பார்த்து நாள் ஆச்சு!” என விசாரித்தான்.
“ஐ ஆம் குட் ஆதி. நீயும் கான்டஸ்ட்ல இருக்கீயா? அப்போ எங்களுக்கு கடுமையான போட்டி