(Reading time: 8 - 15 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

“கையை கூட அசைக்க வேண்டாம், கண்ணை அசைச்சாலே போதும்!”

  

“ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க? நான் உங்க கூட பிரென்ட்லியா இருக்க தானே ட்ரை செய்றேன்?” என கெஞ்சுவதுப் போல சொன்னாள் சேலை கட்டி இருந்தவள்.

  

“அக்ஷரா தி கிரேட் கூட நாங்க எல்லாம் பிரென்ட்ஸா இருக்குறதா? அதெல்லாம் நடக்குமா?” என இப்போதும் கிண்டலாகவே அவளின் நண்பர்களின் ஒருவன் சொல்லவும், ஆதித்யா அவனின் இயல்பில் இருந்து மாறி, சேலைப் பெண்ணின் பக்கத்தில் சென்றான்.

  

“ஹலோ, நீங்க இந்தியனா? சாரீயை இங்கே பார்த்ததும் ஸ்டன் ஆயிட்டேன். உங்களை மாதிரி கல்ச்சர், ட்ரேடிஷன் மதிக்குறவங்களை இந்தக் காலத்துல பார்க்குறது அபூர்வம்!” என வாய்க்கு வந்த விதத்தில் அவளை புகழ்ந்து சொன்னான்!

  

அக்ஷரா அவனை வியப்புடன் நோக்கினாள்!

  

“நான் ஆதித்யா, ப்ரம் சென்னை!” என தன்னை அவளுக்கு அறிமுகம் செய்துக் கொண்டான் ஆதித்யா.

  

அவளை சுற்றி நின்றவர்கள் அசட்டையாக முகத்தை திருப்பிக் கொண்டு அங்கே இருந்து சென்றார்கள்.

  

“நான் அக்ஷரா. நாஷ்வில் ல இருந்து வந்திருக்கேன். என்னோட மதர் டங்கும் தமிழ் தான். நைஸ் மீட்டிங் யூ, ஆதித்யா!” என உற்சாகத்துடன் சொல்லி கையை நீட்டினாள் அக்ஷரா.

  

சில வினாடிகளுக்கு முன் கண்ணீர் மல்க நின்றிருந்தவளின் முகம் இப்போது புன்னகையால் ஜொலித்துக் கொண்டிருந்தது.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.