(Reading time: 8 - 15 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

பளிச்சென்ற முகத்துடன், அலை அலையாக காற்றில் பறந்துக் கொண்டிருக்கும் முடியுடன் இருந்தாள்.

  

ஆதித்யா எதையும் யோசிக்காமல் அவளை உற்றுப் பார்த்தான். மஸ்காரா அணிந்திருந்த கண்கள் பட்டாம்பூச்சியாக இமைத்துக் கொண்டிருக்க, சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிந்த உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன!

  

ஏன் நடுங்குகிறது?

  

அவளை சுற்றி ஆறு ஏழு பேர் நின்றிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு இருந்தது. அவள் மட்டும் சிரிக்கவில்லை.

  

ஆதித்யா அவர்கள் நின்ற இடத்திற்கு பக்கத்தில் சென்றான்.

  

“ஏன் இப்படி பொய் சொல்லி ஏமாத்துனீங்க? என்னால இந்த புடவையைக் கட்டிட்டு இரண்டு அடி கூட ஈசியா வைக்க முடியலை தெரியுமா? நீங்க இரண்டுப் பேரும் கூட சாரீல வரப் போறீங்கன்னு சொன்னதால தானே நானும் கட்டினேன்???”

  

அவள் தான் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தாள். விட்டால் அழுது விடுவாள் போல இருந்தது!

  

அவளின் அருகே ஐந்து இளைஞர்களும், இரண்டு இளைஞிகளும் இருந்தார்கள். ஒருவரும் அவளை சமாதானப் படுத்தக் காணும். அதற்கு மாறாக கிண்டல் செய்வதுப் போல, திட்டுவதுப் போல தான் பேசினார்கள்.

  

“நாங்க சொன்னா நீ அப்படியே நம்பிடுவீயா? இந்த மாதிரி இடத்துக்கு யாராவது பட்டிக்காடு மாதிரி வருவாங்களா?”

  

“நீ இரண்டடி எடுத்து வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லையே, கை அசைச்சா தான் உனக்காக எல்லோரும் ஓடி வருவாங்களே!”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.