அதற்கு மேல தாமதிக்க முடியாமல் உணவிருந்த இடத்திற்கு சென்றான்.
அவனை ராஜக்குமாரன் போல பாவித்து, வாழ்த்துக்கள் சொல்லி மரியாதையுடன் அவன் கேட்ட உணவுகளை எடுத்துக் கொடுத்தார்கள்.
அதித்யா உணவை வெட்டு வெட்டிக் கொண்டிருந்த நேரத்தில் கூட்டம் மெதுவாக சேர ஆரம்பித்தது. காஷ்யாப்பும், ஸ்ரீகரும் கூட வருவது ஆதித்யாவின் கண்ணில் பட்டது. அவர்களிடம் சென்றுப் பேச இப்போது ஆதித்யாவே அதிக ஆர்வம் காட்டவில்லை.
வயிறு நிரம்பியதும், அந்த ஹாலில் நிறைந்திருந்த பல நாட்டினரையும் வேடிக்கைப் பார்த்தான்.
டீ-ஷர்ட் கலர் சூப்பர்!
லேட்டஸ்ட் டெனிம்!
என்ன ஒரு ஹேர் ஸ்டைல்!
ஹாட் ஹெட் செட்!
க்யூட் சாரீ!
சாரீயா?
ஒவ்வொருவரையாக மேலோட்டமாக பார்த்துக் கொண்டிருந்த அதித்யா மீண்டும் பார்வையை கடந்து வந்த திசையில் திருப்பினான்.
சேலையே தான்!
அங்கே ஒரு இளம்பெண் பிரவுன் நிற சேலையில் இருந்தாள்! சினிமா ஹீரோயின்கள் போல