இருக்குன்னு சொல்லு!” என நட்புடன் பதில் சொன்னான் ஸ்ரீகர்.
காஷ்யாப்பிற்கு ஸ்ரீகர் ஆதித்யாவுடன் பேசுவது பிடிக்கவில்லை. அதும் நட்புடன் பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை.
“கடுமையான போட்டின்னு பேப்பர்ல தான் சொல்லனும், ஸ்ரீகர். கான்டெஸ்ட்ல நேரடியா பேசுற இடம் வரும் போது ஆதி எல்கேஜி பாப்பா மாதிரி முழிச்சு நம்ம எல்லோருக்கும் காமிக் ரிலீப் தருவான். அந்த விதத்துல அவனும் வந்திருக்கது நல்லது தான்!” என சொன்னது மட்டுமல்லாமல் காஷ்யாப் கண்களை உருட்டி முழித்தும் காட்டினான்.
ஸ்ரீகர் அவனையும் அறியாது சிரித்தான்.
ஆனால் ஆதித்யாவின் முகம் வாடிப் போனதை கவனித்ததும் சிரிப்பை நிறுத்தி, “எல்லோருக்கு வீக் பாயின்ட் இருக்கும் காஷ். ஆதியை சும்மா டீஸ் செய்யாதே.” என்றான்.
“உண்மையை சொன்னேன் ஸ்ரீ! பட், நமக்கு எதுக்கு வெட்டி பேச்சு. கிளம்பலாம் வாங்க,” என சொல்லி காஷ்யாப் ஆதி பக்கமே பார்க்காமல் நடக்க தொடங்கினான்.
“சீ யூ லெட்டர், ஆதி!” என ஸ்ரீகர் ஆதித்யாவிற்கு கை அசைத்து சென்றான்.
காஷ்யாப் நடந்துக் கொள்ளும் விதம் ஆதித்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. ஆதித்யாவை உடன் வருகிறாயா என்றுக் கேட்கவில்லை, ஒரு கை அசைப்பு இல்லை, என்னவோ ஆதித்யா அவனுடைய ஜென்ம எதிரி போல் அல்லவா நடந்துக் கொள்கிறான்? இத்தனைக்கும் ஆதித்யா தான் காஷ்யாப் மீது கோபப் பட வேண்டும்!
வருத்தம் நிறைந்த மனதுடன் தன் சூட்கேஸை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளி வந்தான் ஆதித்யா.
அங்கிருந்து டாக்ஸி பிடித்து போட்டி நடக்கும் ஹோட்டல் சீசன்ஸ் போர் அடைந்தான். அதே ஹோட்டலில் சான்வி அவனுக்காக அறை புக் செய்திருந்தாள். போட்டியாளர் என்ற விதத்தில் அவனுக்காக ஹோட்டல் அறை வாடகையில் சிறிது தள்ளுபடி கொடுத்திருந்தார்கள்.