“அறிவிருக்கா உனக்கு, கிளம்புறேன்னு தெரியுதுல? எனக்கு வேணும்னா நானே சாப்பிடுவேன்...” என்றவன், அதற்கு மேலே ஒரு வினாடியும் நிற்காமல் அதே வேகத்துடன் கிளம்பிச் சென்றான்.
அதற்கு பிறகு மஞ்சுவிற்கும் உணவு உண்ண பிடிக்காவில்லை!
மனோஜின் மனநிலையை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால், வேலையினால் ஏற்பட்டிருக்கும் கோபத்தை, விரக்தியை அவன் அவள் மீது காட்டுவதை தான் அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை!
பற்களை கடித்துக் கொண்டு அவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்தவள், ஒரு முடிவு எடுத்தவளாக அன்று மாலை மனோஜ் வீடு திரும்ப காத்திருந்தாள். அவன் வந்ததும் உடனே சென்றுப் பேசாமல், அவனுக்கு சிறிது நேரம் கொடுத்து, மெல்ல அவன் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.
லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டிருந்தவன், அவளின் காலடி சத்தம் கேட்டு என்ன என்பதுப் போல அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.
“மனோஜ், நீங்க அப்செட்டா இருக்கீங்க தெரியுது! உங்களுக்கு இந்த வேலை பிடிக்க்கலைன்னா, நாம பேசாம இந்தியா போயிடலாமே! அங்கே போனா விசா ப்ராப்ளம் எல்லாம் இல்லை.. நீங்க வேற வேலை தேடிக்கலாம்... அப்புறம் வேணா...”
மஞ்சு பேசி முடிக்க காத்திருக்காமல்,
“ஷட் அப்!!!!” என்று குறுக்கிட்டு கத்தினான் மனோஜ்!
அவன் அதை சொன்ன விதத்தில் மஞ்சு நடுங்கியே போனாள்!
“நான் என்ன செய்யனும்னு நீ சொல்லி எனக்கு தெரிய வேண்டியதில்லை! உன் வேலையை மட்டும் பார்த்துட்டு இரு போதும்!”
தொடரும்...