“போதும் போதும் நீங்க காதல் மழை பொழிஞ்சது... போய் வேலையை சீக்கிரமா முடிங்க...”
“சாரி pbs... நான் லீவ் போட்டு உனக்கு ஹெல்ப் செய்திருக்கனும்... உன்னையே எல்லாம் செய்ய விட்டுட்டேன்...”
“நீங்க லீவ் போட்டிருந்தா ஒரு வேலையும் முடிஞ்சிருக்காது... நாம ஆர்டர் செய்து தான் டின்னர் செர்வ் செய்திருக்கனும்...!!! நீங்க போய் இப்போ வேலையை முடிங்க... நான் ரெடி ஆகுறேன்... அப்புறம் பசங்க வந்திருவாங்க, டைமே இருக்காது...”
மறுக்காமல், அவளின் நெற்றியில் அன்புடன் முத்தமிட்டு சென்றான் மனோஜ்!
மஞ்சுவும் புன்னகை மின்ன தன்னுடைய அறைக்கு சென்றாள்! அன்று கட்டுவதற்காக தயாராக எடுத்து வைத்திருந்த சேலையை கையில் எடுத்தவளின் மனம் முழுக்க குதூகலம் நிறைந்து இருந்தது!!!
மனோஜுடன் இன்பம், துன்பம் என எதை கடப்பதிலுமே அவளுக்கு மகிழ்ச்சி தான்...
சில நிமிடங்களுக்கு முன் மனதில் தோன்றி இருந்த வருத்தம் மொத்தமாக மாறிப் போயிருக்க, மகிழ்ச்சியுடனே பழைய நாட்களை தொடர்ந்து அசைப் போட்டாள்...!!!!
மஞ்சு மனோஜுடன் பேசுவதை குறைத்துக் கொண்டாள். குறைந்து, குறைத்து, கிட்டத்தட்ட அவள் அவனுடன் பேசுவதே நின்றுப் போயிருந்தது.
ஒன்றரை மாதங்களில் அவர்கள் இருவரின் வாழ்க்கையும் தலைக்கீழாக மாறிப் போயிருந்தது.
மனோஜுடன் சண்டைப் போட வேண்டும் என்றோ, அவனை விட்டு தள்ளி நிற்க வேண்டுமென்றோ மஞ்சு விரும்பவில்லை! ஆனால், மனோஜ் இப்போது நடந்துக் கொள்ளும் விதம் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை!