வேலையிலும் எந்த நல்ல செய்தியும் வரவில்லை என்பதை அவளாலேயே ஊகிக்க முடிந்தது!
இது முடிவே இல்லாத தொடர்கதையாக போய் கொண்டிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது அவளுக்குப் புரியவில்லை...
அதே மன உளைச்சலுடன் அவள் இருந்தப் போது அமுதாவிடம் இருந்து அவளுக்கு போனில் அழைப்பு வந்தது.
டிஸ்ப்ளேவில் அமுதா பெயர் பார்த்தப் பிறகு தான் அவளுடன் பேசி பல நாட்கள் ஆகி விட்டது என்பதே மஞ்சுவிற்கு நினைவிற்கு வந்தது.
அமுதா மட்டுமல்லாமல் மற்ற அனைவருடனுமே அவள் பேசி நிறைய நாட்கள் ஆகி இருந்தது! அவள் இருந்த மனநிலையில் யாருடனும் பேச அவளுக்கு தோன்றவே இல்லை.
இப்போது அமுதாவின் அழைப்பை ஏற்காமல் இருந்தால் சரியாக இருக்காது என்ற எண்ணத்துடன், அழைப்பை ஏற்று,
“ஹெலோ!” என முடிந்த அளவு இயல்பான குரலில் பேசினாள் மஞ்சு!
“என்ன மஞ்சு உடம்பு சரியில்லையா? குரல் எப்படியோ இருக்கு???”
உடனடியாக குரலில் இருந்த சிறு வேறுப்பாட்டைக் கூட கண்டுக் கொண்ட தோழியின் அன்பில் நெகிழ்ந்த மஞ்சு,
“அதெல்லாம் இல்லையே அமுதா...” என்றப் போது அவளின் குரல் சிறு பிசிறு தட்டி தான் ஒலித்தது!
தொடரும்...