(Reading time: 8 - 15 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

“இப்போ இருந்து என்னுடைய விருப்பமும் அதே தான்! நாம ஜக்ருதியை சந்திச்சே தீரனும் ஆதி!!”

  

அக்ஷரா, அதித்யா இருவரும் ஒன்றாக சென்று தங்களுடைய டீமை ரெஜிஸ்டர் செய்தார்கள்.

  

அது இரண்டே நிமிட வேலை தான்!

  

அவர்களின் டீம் பெயர் மற்றும் அவர்கள் இருவரின் பெயரையும் பெற்றுக் கொண்டு போட்டியில் டீமாக அவர்களை ரெஜிஸ்டர் செய்து ரசீதும் உடனடியாக கொடுத்தார்கள்!

  

டீம் ரெஜிஸ்ட்ரேஷன் முடிந்ததும்,

  

“நான் என்ன செய்யனும், ஆதி? என்ன எல்லாம் செய்யனும்னு சொல்லு, நான் எல்லாம் சரியா செய்து முடிக்கிறேன்!” என ஆர்வம் மின்னக் கேட்டாள் அக்ஷரா.

  

“முதல்ல இந்த் எக்சைட்மென்ட் கண்ட்ரோல் செய் அக்ஷரா. நாம வெறும் ரெஜிஸ்டர் மட்டும் தான் செய்திருக்கோம். இதனால எதுவும் நடக்கப் போறது கிடையாது. நான் இந்த போட்டிக்காக சில ஐடியாஸ் வச்சிருக்கேன், அதுல பெஸ்ட் எதுன்னு முதல்ல செலக்ட் செய்யலாம்,” என சொன்ன ஆதி, பேச்சை பாதியில் நிறுத்தி அக்ஷராவைப் பார்த்தான். தன் தவறை உணர்ந்தவனாக,

  

“சாரி, நாம டீம். நீயும் ஐடியாஸ் வச்சிருப்ப,” என்று அவன் சொல்லத் தொடங்கவும்,

  

“இல்லை ஆதி! நான் ஏன், என்ன, எதுக்குன்னு எந்த கேள்வியும் உன் கிட்ட கேட்க மாட்டேன்னு ப்ராமிஸ் கொடுத்திருக்கேன். அதை மாத்த மாட்டேன். உன் கிட்ட இருந்து நான் கத்துக்க தான் போறேன். நீயே என்ன செய்யப் போறோம்ன்னு சொல்லு. நான் என்ன செய்யனும்ன்னும் சொல்லு. இந்த காம்பெடிஷன் உனக்கு ரொம்ப முக்கியம். உனக்கு நான் ஹெல்ப் மாதிரி இருக்கப் போறேன், அவ்வளவு தான்! எல்லா டெசிஷனும் நீயே எடு!” என்றாள் அக்ஷரா உற்சாகமாக!

  

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.