ஆதித்யா உண்மையாகவே மனதுள் ஆச்சர்யப்பட்டான்! என்ன தான அக்ஷரா வாக்குறுதி கொடுத்திருந்தாலும், அவனே கூட அவளிடம் கேள்விகள் கேட்க கூடாது என்று சொல்லி இருந்தாலும், அக்ஷரா இந்த அளவுக்கு அதை ஏற்றுக் கொள்வாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.
“தேங்க்ஸ் அக்ஷரா!” என்றப் போது உண்மையாகவே தான் சொன்னான்!
அதற்கு பிறகு அவனும் அக்ஷராவும் தொடர்ந்து எங்கே, எப்படி சந்திப்பது, என்னென்ன அவர்களுக்கு தேவைப்படும் என்றெல்லாம் மேலோட்டாமாக விவாதித்தார்கள்.
“நான் முதல்ல டாப்பிக் முடிவு செய்றேன், அக்ஷரா. அதுக்கு அப்புறம் எப்படி செய்றது, என்னென்ன டைம்ல எது எதை முடிக்குறதுன்னு எல்லாம் பார்ப்போம்!” என்றான் ஆதி.
“டன் ஆதி! அப்போ நான் கிளம்பட்டுமா? நாளைக்கு எப்போ நாம மீட் செய்யனும், நான் எங்கே வரணும்னு மட்டும் எனக்கு டெக்ஸ்ட் அனுப்பு. நான் கரக்ட் டைம்க்கு வந்திருவேன்,” என்றாள் அக்ஷரா!
“என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்புறேன்னு சொல்ற, அக்ஷரா??? இன்னைக்கு இங்கே நிறைய டிஸ்கஷன்ஸ் அரேன்ஜ் செய்திருக்காங்களே?”
“இல்லை ஆதி, அதெல்லாம் என்னால இன்னைக்கு பார்க்க முடியாது. நான் இங்கே என் பெரியப்பா வீட்டுல தங்கி இருக்கேன். என்னுடைய லோகல் ட்ராவல்க்கு இன்னும் நான் சரியான அரேஞ்ச்மேன்ட்ஸ் செய்யலை. இன்னைக்கு ஒரு நாளைக்கு ஸ்டாப் கேப் அரேஞ்ச்மேன்ட்டா என் பெரியப்பா மகன் என்னை டிராப் செய்துட்டு போனான். அவனே தான் திரும்ப இங்கே இருந்து பிக்கப்பும் செய்வான். ரொம்ப கஷ்டப்பட்டு கெஞ்சி அவனை இதை செய்ய வச்சேன். அவன் என்னை பிக்கப் செய்ய வந்து கால் மணி நேரம் மேல ஆச்சு! நான் தான் நாம பேசி ஒரு டெசிஷன் எடுத்தப்புறம் கிளம்பலாம்னு அவனுக்கு ரிப்ளையே அனுப்பாம இருக்கேன். பயங்கர கோபத்துல இருப்பான். இதுக்கு மேல நான் போகாம இருந்தா நல்லா இருக்காது.”