(Reading time: 8 - 15 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

“ஐயையோ! உன்னை திட்டப் போறார்!”

  

“திட்டுறதா, பேய் மாதிரி கத்துவான்! அவனை இங்கே எனக்கு ரைட் கொடுக்க வைக்குறதுக்கு எவ்வளவு கெஞ்ச வேண்டி இருந்துச்சு தெரியுமா! சரி, இந்தக் கதை நாளைக்கு பேசலாம். நாம் கிளம்புறேன் ஆதி. நீ ப்ளான் செய்ததும் எனக்கு மெசேஜ் அனுப்பு. மறந்திராதே!”

  

“கட்டாயம் அனுப்புறேன் அக்ஷரா. நீ மெதுவா நடந்துப் போ!”

  

அக்ஷரா சிரித்து விட்டு, கால்களில் தடுக்கி கொண்டிருந்த சேலையை கொத்தாக தூக்கிப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.

  

ஆதித்யாவிற்கு சிரிப்பு வந்தது! இருந்தாலும் மனம் திசை திரும்ப அனுமதிக்காது அங்கே ஏற்பாடாகி இருந்த விவாத மேடையில் கவனத்தை செலுத்தினான்.

  

பார்க்கிங் வந்து சேர்ந்த அக்ஷரா அவளுக்காக காத்திருந்த கார் பக்கத்தில் வந்து கார் கதவை தட்டினாள்.

  

கார் கதவு திறந்த உடனேயே, “சாரி, சாரி சாரி விவேக். நிஜமா சாரி! உன்னை வெயிட் செய்ய வச்சது என் தப்பு தான். சாரி சாரி சாரி!” என்று காரினுள் இருந்தவன் பேசவே அனுமதிக்காது மன்னிப்பு கேட்டுக் கொண்டே முன் இருக்கையில் அமர்ந்தாள்.

  

கார் ஓட்டுனர் இருக்கையில் இருந்த அவளின் பெரியப்பா மகன் விவேக் அவளை பார்த்து கோபமாக முறைத்துக் கொண்டே காரை கிளப்பினான்.

  

“என்னால உனக்கு டிரைவர் வேலை எல்லாம் செய்ய முடியாது, அக்ஷரா. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் என்னால வர முடியும். நீ அப்பா கிட்ட பேசி வேற ஏற்பாடு செஞ்சுக்கோ. எனக்கு இதுக்கு எல்லாம் டைம் கிடையாது,” என விவேக் சொல்லிக் கொண்டிருந்தப் போது, அக்ஷ்ராவின் மொபைலில் அழைப்பு வருவதன் அறிகுறியாக இசை ஒலித்தது!

  

“விவேக், விவேக், ப்ளீஸ், அஞ்சு நிமிஷம் வாயை மூடிக்கோ. அதுக்கு அப்புறம் திட்டு, கத்து,

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.