நிறுத்தி, பின் தொடர்ந்தான்.
“ஒரு கேஸ தேன் சார் எடுக்கலை, வேற யாரோ ஹாண்டில் செய்யப் போறாங்களாம்!”
“ஏன் அவர் எடுக்கலை?”
“அதெல்லாம் தெரியலை!”
சத்யா மேலே கேள்விகள் கேட்காமல் யோசனையில் ஆழ்ந்தாள்!
**************
மாலையில் ஷாலினியை ஸ்கூலில் இருந்து அழைத்துக் கொண்டு நேராக சந்தைக்கு சென்ற சத்யா, அதற்கு முன்பிருந்தே அவளை தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த அந்த இருவரையும் கவனித்தாள். உயரமாக, நல்ல உடல் கட்டுடன் இருந்தவர்களின் முகத்தில் இருந்த வடுக்கள் அவர்களை பயங்கரமாக காட்டியது.
ஒரு நேர்மையான போலீஸ் ஆபிசரின் மனைவி என்ற முறையில் செல்லும் இடத்தில் எல்லாம் கவனமாக இருப்பதையும், எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதையும் சத்யா நன்றாக கற்றுக் கொண்டிருந்தாள்.
அந்த எச்சரிக்கை உணர்வினால் தான் இவர்களையும் கண்டுப்பிடித்து இருந்தாள்.
அவளை பின்தொடர்ந்துக் கொண்டிருந்த இருவரையும் விழி ஓரத்தில் கண்காணித்தப்படி இருந்தாலும், கண்டுக் கொள்ளாதாதுப் போல், காய்கறி கடைக்கு சென்று தான் வந்த வேலையை தொடங்கினாள்.
அவர்கள் இருவரும் இப்போது வெகு அருகில் வந்து நின்றிருந்தனர்.
கையில் இருந்த பிஞ்சு வெண்டைக்காய்களை வைத்து விட்டு திரும்பி அவர்களை பார்த்து முறைத்தாள் சத்யா!