(Reading time: 11 - 22 minutes)
Inspector Then
Inspector Then

  

வாயில் பக்கோடாவுடன் விழித்தான் அபினவ்.

  

“உன் இன்ஸ்பெக்டர் எதுக்கு டிஎஸ்பி பார்க்க போயிருக்கார்?”

  

“அவரையே நீங்க கேட்கலாமே?”

  

“அது எனக்கு தெரியாதா? அவர் கிட்ட இருந்து அவரா நினைக்காம ஒரு வார்த்தை கூட வெளியே வராது! அந்த முத்துக்குமார் கேஸ்ல கூட கொஞ்சமா கிள்ளி எடுத்து விஷயம் சொன்னார். மீதி எல்லாம் நானும் பேப்பர்ல படிச்சு தான் தெரிஞ்சுக்கிட்டேன்.”

  

“தேன் சார் டிபார்ட்மென்ட்க்கு எவ்வளவு சின்சியரா இருக்கார்!” என அபினவ் மெச்ச, சத்யா அவனை பார்த்து முறைத்தாள்!

  

“டிபார்ட்மென்ட் விஷயம் எல்லாம் யாருக்கும் சொல்லக் கூடாது, அது தப்பு!”

  

“ஹலோ, நீங்க எல்லாம் பப்ளிக் சர்வன்ட்ஸ்! நான் எல்லாம் ஜெனெரல் பப்ளிக். எல்லாம் தெரிஞ்சுக்க எங்களுக்கு முழு உரிமை இருக்கு. நான் டேக்ஸ் கட்டுறேன்! அதெல்லாம் வச்சு தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்குறாங்க.”

  

“என்ன நீங்க இவ்வளவு பேசி பயமுறுத்துறீங்க.”

  

“இன்னும் நிறைய கூட பேசுவேன். நீ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. நீ தான் சொன்னேன்னு நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன். நீ சொல்ற விஷயத்தையும், நான் வேற யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன். சில விஷயங்கள் தெரியலைனா எனக்கு மண்டைக் குடையும்! அதனால தான் கேட்கிறேன். பொதுவா டிஎஸ்பி ஆபீஸ் போனா, மீட்டிங், இதை பத்தி பேசப் போறேன் அப்படி இப்படின்னு பொதுவா சொல்லிட்டு போவார். ஆனால் இன்னைக்கு எதுவுமே சொல்லலை. அப்படி என்ன விஷயம்?”

  

“எனக்கு தெரியாது,” எனத் தொடங்கிய அபினவ் சத்யாவின் முறைப்பை கவனித்து பேச்சை

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.