(Reading time: 11 - 22 minutes)
Inspector Then
Inspector Then

  

சத்யா அதற்கு எல்லாம் கலங்கவில்லை.

   

"ரொம்ப பேசுறது, நானா? நீங்களா? நீங்க சொல்ற கேஸ் பத்தி எனக்கு தெரியாது. ஆனால் உண்மை வெளியே வரலைனா உங்க எம்.எல்.ஏ அடுத்த எலக்ஷன்ல எக்ஸ் எம்.எல்.ஏ ஆக வேண்டியது தான்! உங்களை மாதிரி ஒரு நாலு பேர் போதாது இப்படி அவருக்கும் அந்த கொலை கேசுக்கும் தொடர்பு இருக்குன்னு செய்தியை பரப்ப?"

  

"ஹேய் என்னடி கிண்டல் செய்றீயா?"

  

காளி என்று அழைக்கப்பட்டவன் கோபமாக முன்னேறி வர, சத்யா அசையாமல் நின்றாள்.

  

"யாருடா அது பட்ட பகல்ல மார்க்கெட்ல வந்து கலாட்டா செய்றது?"

  

எங்கிருந்தோ அந்த கம்பீரமான குரல் ஒலித்தது.

  

"டேய் காளி, போலீஸ்டா!! வா வா, இவளை அப்புறமா பேசிக்கலாம்."

  

காளியுடன் வந்தவன் அவனின் காதில் ஓதிவிட்டு, காளியை இழுத்து சென்றான்.

  

அவர்கள் சென்ற திசையை முறைத்துப் பார்த்து விட்டு, குரல் வந்த பக்கம் பார்த்தாள் சத்யா.

  

அங்கே வினோதன் புன்னகையுடன் நின்றிருந்தான்.

  

"நல்ல போலீஸ் நீங்க, அவங்களை ஓட விட்டுட்டு நின்னு போஸ் கொடுக்குறீங்க?" என்று புகார் சொன்னாள் சத்யா!

  

"தப்பு தான் சிஸ்டர். உண்மையில நீங்க இருக்க வேண்டிய வேலையில நானும் உங்க தேனும் இருக்கோம். இவனுங்களை அப்போவே பார்த்தேன். மிரட்டி வைக்கலாம்னு வந்தால் உங்க கிட்ட வந்து வம்பு செஞ்சுட்டு இருக்காங்க. ஆனாலும் வைஜெயந்தி ஐ.பி.எஸ் கூட உங்க கிட்ட

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.