"இல்லை சத்யா..."
"இங்கே பாருங்க, இன்னைக்கு வரைக்கும் நான் ஒரு போலீஸ் ஆபிசர் மனைவின்னு பெருமை பட்டிருக்கேன். ஒரு நாள் கூட வருத்தப் பட்டதில்லை. இப்போ நீங்க செய்துட்டிருக்க விஷயம் என்னை ரொம்ப வெட்க பட வைக்குது!"
"சரி சரி நிறுத்து. நான் கேசை எடுத்துக்குறேன். ஆனால் நீ எனக்காக ஒரு விஷயம் செய்யனும்!"
"என்ன செய்யனும்?"
"உன் பிடிவாதத்தை விட்டுட்டு, உங்க அப்பாவை போய் பார்க்கனும். அங்கேயே தங்கி இருந்து அவரை கவனிச்சுக்கனும்."
"அது... உங்களுக்கு எப்படி தெரியும்?"
"உன் போனை நான் வச்சிருந்தேனே, உன் அண்ணன் போன் செய்தான், நான் பேசினேன். நீ உன் பிடிவாதத்தை விடுறேன்னு சொல்லு, நான் இந்த கேசை எடுத்துக்குறேன்."
"..."
"உனக்கென்ன கல் மனசா சத்யா? கால் ஹிஸ்டரில பார்க்கிறேன் உன் அண்ணன் அத்தனை தடவை போன் செய்திருக்கான், ஒரு தடவை கூட எடுக்கலை நீ. அவன் மெசேஜ் படிச்சாவது அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதில்லை, அப்போவும் நீ என்கிட்டே அதை பத்தி சொல்லலை???"
"ம்ம்ம்... வேலை வெட்டி இல்லாம இருக்கீங்கன்னு தெரியுது! வீட்டுல வந்தா வேலைன்னு உட்கார்ந்துக்க வேண்டியது ஸ்டேஷன்ல உட்கார்ந்து என் போனை நோண்ட வேண்டியது... சரி சரி முழிக்காதீங்க, நான் அப்பவை பார்க்க போறேன்! நீங்க???"