அவங்களா?"
"ஆமாம், அவங்களே தான்! பழைய காலத்து ராஜ பரம்பரைன்னு சொல்றாங்க. கோடி கோடியா பணம் இருக்கு... பல்லாயிர ஏக்கர் எஸ்டேட் இருக்கு... நிறைய நல்லது எல்லாம் செய்றவங்க. இந்த ஊருல ஒரு பெரிய ஜமீன் மாதிரின்னு வச்சுக்கோங்களேன்..."
"சரி, அவங்களுக்கு என்ன?"
"அவங்களுக்கு ஒண்ணுமில்லை. அவங்க வீட்டுக்கு வந்த ஒரு பொண்ணு மர்மமான முறையில செத்து போயிட்டா."
"ஓ! ஆமாம் நான் கூட கேள்வி பட்டிருக்கேன், அந்த ராஜசுலோச்சனாவுடைய மகளோட ஃபிரெண்ட் தானே இந்த பொண்ணு? ஆனால் இது நடந்து கொஞ்சம் வருஷம் ஆச்சே?"
"ஆமாம்! மூணு வருஷம் ஆச்சு! அப்போ விசரணை செய்த போலீஸ் இது தற்கொலைன்னு முடிவு செஞ்சு கேஸை மூடிட்டாங்க. ஆனால் அந்த பொண்ணோட அப்பா, அவ பிரெண்ட்ஸ் எல்லாம் இது தற்கொலை இல்லை கொலைன்னு சொல்லி சேர்ந்து போராட்டம் நடத்தி கேசை திரும்ப எடுக்க வச்சிருக்காங்க."
"ஓ!"
"பாவம், வீட்டுக்கு ஒரே பொண்ணு! நல்லா படிக்குற பொண்ணும் கூட! அவங்க அம்மாக்கு அவ இறந்ததில மன நிலை பாதிப்பு எற்பட்டிருச்சு. அவ அப்பா ஒரு பெரிய டாக்டர். இப்போ தன்னோட வேலையை எல்லாம் விட்டுட்டு, தன்னோட பொண்ணுக்கு நியாயம் கிடைக்கனும்னு போராடிட்டு இருக்கார்."
"ஓஹோ...!" என்றாள் சத்யா யோசனையுடன்.
"லாஸ்ட் வீக் நடந்த பார்லிமென்ட் செஷன்ல இந்த் கேஸ் பத்தி ஒரு எம்.பி. பேசினார். அப்புறம் என்ன, தானா ப்ரெஷர் வந்தாச்சு. கேசை திரும்ப திறக்க சொல்லிட்டாங்க. ஆனால் தேன் இந்த கேசை எடுத்து நடத்த மாட்டேன்னு சொல்லிட்டான்!"