அமுதா குறிப்பிட்ட லெக்சரை சரவணன் எதற்காக கொடுத்திருப்பான் என்று அவனால் யூகிக்க முடிந்தது... முதல் நாள் அலுவலகத்தில் சந்தித்தப் போது அமுதா மஞ்சு பற்றி குறிப்பிட்ட நேரங்களில் சரவணன் அவளை பார்த்த பார்வைகள் மனோஜின் கவனத்திலும் விழுந்திருந்தது... அதைப் பற்றி தான் அவன் மனைவியிடம் பேசி இருக்க வேண்டும்...
அதனால் தான் அமுதா மஞ்சு பெயரையே சொல்லாமல் இருக்கிறாளா???
அமுதாவும் மஞ்சுவும் எந்த அளவிற்கு நெருங்கிய தோழிகள் என்பது மனோஜிற்கு நன்றாக தெரியும்...
அவர்கள் இருவரையும் இப்படி பார்ப்பது அவனுக்கு சரியாக படவில்லை...
ஆனால் அதற்காக மஞ்சு அவனிடம் சொல்லவே சொல்லாத விஷயத்தை பற்றி அமுதாவிடம் கேட்கலாமா வேண்டாமா??? அதைப் பற்றி சரவணன் எப்படி எடுத்துக் கொள்வான்???
அமுதா மஞ்சுவைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருப்பதை அனுமதிப்பது தவறு தானே???
மனோஜின் மனம் முடிவெடுக்க இயலாமல் பெண்டுலம் போல இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் சென்று வந்துக் கொண்டிருந்தது...
அதற்கு நடுவே சரவணன்,
“சாரி மனோஜ்... நாங்க தேவையே இல்லாம டிபேட் செய்துட்டு இருக்கோம்... உங்களுக்கு இது எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது... மஞ்சுவை எனக்கும் தெரியும். அவ எப்படி இருக்கா? நீங்க எங்க கம்பெனில ஜாயின் செய்தது பத்தி எப்படி எடுத்துக்கிட்டா???” என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டு, மனோஜிடம் பேசினான்...
“ஹ்க்கும்... நான் பேசினா மட்டும் தப்பு...” என்று அமுதா மெல்ல முனுமுனுப்பது சரவணனுக்கு