சுவாதிக்கு கண்களை நிமிர்த்தாமலே விஷாகனின் பார்வை புரிந்தது...!
கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே அவளுக்கு பரிச்சயமானவன் என்றாலும் இந்த திடீர் கல்யாணம் அவளை ஒரு குழப்பு குழப்பி இருந்தது...!
அவளுக்கு அவனை எப்போதுமே மனதிற்குள் பிடிக்கும் என்றாலும் இப்படி திடீர் திருமணம் எல்லாம் அவள் கற்பனை கூட செய்துப் பார்த்ததில்லை.
அந்த வில்லன் ரகுவை மிரட்ட தான் பேசுகிறான் என்று பார்த்தால் விஷாகன் திடீரென இப்படி மஞ்சள் கயிறுடன் அவள் முன் வந்து நிற்பான் என்றெல்லாம் அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை....
அவளும் அவனை விரும்பி தான் மணந்துக் கொண்டாள்....
ஆனால்.... இப்போது அவனின் வீட்டில் வரவேற்பு எப்படி இருக்கும் என்று தான் புரியவில்லை!
சுவாதி இறங்குவதற்கான அறிகுறி தெரியாததால் காரில் இருந்து இறங்கிய விஷாகன், அவள் பக்கம் இருந்த கதவையும் திறந்து,
“வா சுவாதி...” என்றான்.
அவள் தயக்கத்துடன் இறங்கவும், அவளின் வலது கையை அழுத்தமாகப் பற்றி உடன் அழைத்து சென்றான்.
அவன் கைப்பிடியில் இருந்த அந்த கூடுதல் ‘அழுத்தம்’ அவளுள் பல் வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது.
எதுவானாலும் அவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கை தோன்ற அவனை பின் தொடர்ந்து சென்றாள்.