“ம்ம்ம்....”
“அந்த ரகுவுக்கு நான் ரொம்பவே நன்றி கடன் பட்டிருக்கேன்.... ஜாக்பாட் மாதிரி உன்னை எனக்கு ஈசியா கிடைக்க செஞ்சுட்டானே....”
அவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்....
“சும்மா தானே சொல்றீங்க?”
“சும்மா சொல்றேனா! நீ சரியான டுபுக்ஸ்....”
“ஹ்ம்ம்....”
“இதுவரைக்கும் அம்மா கிட்ட கேட்காமல் நான் எதுவுமே செய்ததில்லை.... ஆனால் அதை பத்தி எல்லாம் யோசிக்காமல் ஒரு சின்ன சான்ஸ் கிடைச்ச உடனே எப்படி உன்னை எனக்கு சொந்தமாக்கி கிட்டேன் பார்த்தீயா?”
“ஹ்ம்ம்... நான் உங்களுக்கு சரியான ஜோடி இல்லை.... நீங்க ஸ்மார்ட், ஹேண்ட்சம்....”
“ஹையோ லூசு! உனக்கு என்ன குறைச்சல் ரொம்ப அழகா இருக்க.... உன் சித்தி உன் கிட்ட சொல்லி இருக்கிறது எல்லாம் பொய்....”
“இல்லை நானே கண்ணாடியில பார்த்திருக்கேன்....”
அவளின் அருகே நெருங்கி அமர்ந்தவன்,
“என்ன பார்த்திருக்க? இந்த நிலா மாதிரியான வட்ட முகத்தை பார்த்திருக்கீயா? மீன் போல அழகா இருக்க இரண்டு கண்ணைப் பார்த்திருக்கீயா? பட்டாம்பூச்சி போல படபடக்குற இந்த இமைகளை பார்த்திருக்கீயா? ஆப்பிள் மாதிரி சப்பியா இருக்க இந்த கன்னங்களை