(Reading time: 10 - 19 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

அறையின் மூலையில் இருந்த சிறிய மேஜை மீதிருந்த விஷாகனின் போட்டோ அவளை ஈர்த்தது. அதையே பார்த்திருந்தவள், மேலே என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள்.

  

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து அறைக்குள் வந்த விஷாகன், உடன் வந்த வேலை ஆள் அவளின் பெட்டிகளை வைத்து விட்டு போகும் வரை அமைதியாக இருந்தான்.

  

பின் கதவை சாத்தி விட்டு அவளின் அருகே வந்தவன், வெகு இயல்பாக அவளின் கையை பற்றிக் கொண்டு,

  

ரூம் பிடிச்சிருக்கா?” என்றுக் கேட்டான்.

  

பதில் சொல்ல வாயை திறந்தாலும் சுவாதியின் வாயில் இருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை...!

  

தேவர் மகன் ரேவதி ஸ்டைலில் வெறும் காற்று தான் வந்தது....

  

அவளின் அந்த வெட்கப் போராட்டம் அவனுக்கும் புரிந்தது போல தான் அவளுக்கு தோன்றியது.... அவன் முகத்தில் தோன்றி இருந்த அந்த சின்ன புன்னகை அவன் அதை ரசிப்பதை காட்ட அவளுள் மெல்லிய ரசாயன மாற்றம்...!

  

விஷாகனுக்கு இம்மெனும் முன் தோன்றும் அவளின் வெட்கம் ஆர்வத்தை கொடுத்தது.... அவளை சீண்டி பார்க்க முடிவு செய்து,

  

அம்மா என்ன சொன்னாங்கன்னு கேட்க மாட்டீயா???” என்றான்.

  

தயக்கத்துடனே,

  

என்ன சொன்னாங்க?” என்றுக் கேட்டாள் அவள்.

  

கோபமா இருக்காங்க.... நான் இதுவரைக்கும் அவங்க சொல்லை மீறினது இல்லை... அவங்க

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.