**************
சுவாதிக்கு விழிப்பு வந்த போது, மனமெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.... அவளை விரும்பி, அவளை அவளாகவே ஏற்றுக் கொண்டிருக்கும் கணவனின் நினைவில் அவளின் கன்னங்கள் சூடாகின....
கண்களை திறக்காமலே மெல்ல கைகளால் அவனை தேடினாள்....
அவன் அருகில் இல்லை என்பது புரியவும், கண்களை திறந்துப் பார்த்தாள்....
அவன் அவளின் அருகே கட்டிலில் இல்லை....
அவசரமாக எழுந்தாள்....
“ஹேய் மை டியர் டுபுக்ஸ்.... வள்ளி.... குட் மார்னிங்....”
பால்கனி பக்கம் ‘புஷ் அப்’ செய்தபடி பேசியவனை இமைக்காமல் பார்த்தாள் அவள்....
“நல்லா சைட் அடிக்குறீயே.... ! ஒரு நாள்ல நல்ல இம்ப்ரூவ்மென்ட் தான்... உனக்காக ப்ரேக்பாஸ்ட் எடுத்துட்டு வந்து வச்சிருக்கேன்.... சீக்கிரம் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்....”
யோசனையுடன் குளித்து விட்டு வந்தவள், வா என்று கை விரித்து அழைத்தவனின் கரங்களுக்குள் தயக்கமில்லாமல் அடைக்கலம் புகுந்தாள்.
“அம்மா ரொம்ப கோபமா இருக்காங்க டுபுக்ஸ்... நான் இருக்கும் போது நான் பார்த்துப்பேன்.... நான் இல்லாதப்போ நீ கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ....”
“ஹ்ம்ம்....”
“நல்லா தலையை ஆட்டுற! உன் கிட்ட அப்பப்போ ஒரு வார்த்தை பேச வைக்கவே நான்