(Reading time: 10 - 19 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

அவன் செல்லம் கொஞ்சலில் அவளிடம் ஏற்பட்ட மகிழ்ச்சியும், வெட்கமும், அவனின் ஆசைக்கு தூபம் போட,

  

கேன் ஐ கிஸ் யூ?” என்று கேட்டான் அவன்.

  

சுவாதி திகைத்துப் போனாள்....

  

முன் தினம் இதையே கேட்டிருந்தால் கோபப் பட்டிருப்பாள்.... இப்போது கேட்பவன் கணவன்.... என்ன சொல்வது என்று புரியாமல் திரு திருவென விழித்தாள் அவள்...

  

ப்ளீஸ் வள்ளி.... கேன் ஐ???”

  

அவனின் ப்ளீஸ், அவளை ‘ப்ளீஸ்’ செய்து விட, மெல்ல தலை அசைத்து தன் சம்மதத்தை சொன்னாள் அவள்....

  

அடுத்த வினாடி அவனின் இரும்பை விட இறுக்கமான அணைப்பில் இருந்தாள்...

  

அவனின் அணைப்பை தொடர்ந்த அழுத்தமான முத்தம் தந்த போதையில் தலை சுற்றி போனாள்...

  

முத்தமிட அனுமதி கேட்டவன், அத்துடன் நிறுத்தாமல் இருக்க, அவளிடம் மிக மெல்லியதான தயக்கம் தோன்றியது....

  

அதையும் புரிந்துக் கொண்டவனாக, அவளின் கண்களை நேராக பார்த்தவன்,

  

“கிஸ் செய்துட்டு அப்படியே விட்ருவேன்னு நினைச்சீயா என்ன? டுபுக்ஸ்....”

  

இல்ல.... அம்மா... உங்க.... அத்தை....”

  

அவள் சொல்ல வருவது அவனுக்குப் புரிந்தது....

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.