“அம்மா மனம் மாறுற வரைக்கும் எல்லாம் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை டுபுக்ஸ்....”
“இல்லை...”
“அவ்வளவு பொறுமை இருந்திருந்தா, அந்த ரகுவை மிரட்டிட்டு, உங்க அப்பா கிட்ட டைம் கேட்டு, என் அம்மா கிட்ட வந்து விஷயத்தை சொல்லி, மெதுவா உன்னை கல்யாணம் செய்திருக்க மாட்டேனா???”
சுவாதி அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்....
“ஐ லவ் யூ மை டியர் வள்ளி... நீ எனக்கே எனக்கானவ.... எனக்காக பிறந்த என்னோட வள்ளி....”
“நான் உங்களுக்கு எந்த விதத்திலுமே ஏத்தவ இல்லை...
“டுபுக்ஸ் டுபுக்ஸ்... நீ ஒரு லூஸு... எனக்கு உன்னை இப்படியே ரொம்பப் பிடிச்சிருக்கு... ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு...”
சுவாதி ஒரு வினாடி அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.....
அடுத்த வினாடி, அவன் மேலே பேசும் முன் அவனை இறுக கட்டிக் கொண்டாள்....
இந்த இருபத்தி இரண்டு வருடங்களில் ஒருமுறை கூட இப்படி ஒருவரும் அவளிடம் சொன்னதில்லை....
தங்களின் மனங்கள் ஒத்து போயிருப்பது புரிந்துக் கொண்ட இருவரும்.... கணவன் மனைவி என்ற உரிமையும் இருக்க, தயக்கங்களை விட்டு விட்டு, தங்களின் காதலின் அடுத்த பரிணாமத்தை நோக்கி சென்றார்கள்.... வெற்றியும் பெற்றார்கள்....