" எதுக்காக்கும் தாங்க்ஸ்?"
" என் கையில் முதல்ல ஈ குட்டியை கொடுத்தற்கு, இந்த சந்தோஷத்தை கொடுத்தற்கு.
இது நம்ம இரண்டு பேருக்கும் சந்தோஷம் தான், நாயரே! "
இரண்டு நாளில் அவர்கள் வீடு வந்து சேர்ந்தனர். குழந்தைக்கு பேர் வைக்கும் விழா பெரிதாக கொண்டாடினர்.
அந்த விழாவோடு, தன் அப்பா அம்மாவிடம் பேசி, கார்த்திக்கின் கல்யாணம் நிச்சயம் செய்து விட்டாள், மானஸா.
ஒரே மாதத்தில் திருமணம் செய்துவிட்டார்கள்.
கல்யாணம் முடிந்த அடுத்த வருடமே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
மாதவன், குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்து விட்டான். தன் மனைவியையும், மூன்று குழந்தைகளுடனும் எல்லா நாடுகளுக்கும் பறந்தான், தன் மனைவியை தன் தீவில் இருக்கும் வியாபாரத்தில் ஈடுபடுத்தினான். அவளும் உதவியதால், தீவில், நல்ல போர்டிங் ஸ்கூல், ஆஸ்பத்திரி என்று கட்டினான். தன் குழந்தைகளையும் அங்கேயே அழைத்து கொண்டு வந்து படிக்க வைத்தான். வெளியூர்களில் இருந்து குழந்தைகளை கொண்டு வந்து அங்கு சேர்த்தனர்.
குழந்தைகள் எல்லாம் வளர்ந்து பெரியவர்கள் ஆகி விட்டனர். எல்லா பெரியவள் சஹானாவும், ஆனந்த்பைரவும், சங்கர்பரனும், அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தனர்.
சஹானா அவளுடைய மாஸ்டர்ஸ் டிகிரி அமெரிக்காவில் முடித்தவுடன் அவள் அங்கே இருந்து வேலை செய்ய வேண்டும் என்று தன் பெற்றோர்களிடம் கேட் டாள். ஆனால் மாதவன், நீ இங்கே வந்து விடு நம்மளுடைய வியாபாரம் விரிந்து கிடக்கிறது அதை நிர்வகிக்க ஆட்கள் வேண்டும் அதனால் நீ இங்கு வந்து விடு “என்று கூறினான்.