“டாடி, நான் அனிருத் என்னும் ஒருவனை காதலிக்கிறேன் அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்,” என்று கூறினாள் சஹானா.
"வாவ் சூப்பர்! "என மாதவன் கூறிவிட்டு, "அந்த பையனுடைய விவரங்கள் சொல்லு சஹானா, நான் அவங்க பாரெண்ட்சை பார்த்து பேசுறேன்."
"டாடி, அவன் யூஎஸ்லதான் இருக்கப்
போறான், நான் எப்படி இந்தியா வந்து இருக்க முடியும்?"
இம், நல்ல கேள்விதான், ஆனா, இத நான் கொஞ்சம் யோசிக்கணும், எனக்கு ஒரு வாரம் டைம் கொடு, பிறகு சொல்றேன்."
" சரி டாடி. அம்மா, என்ன சொல்வாங்க டாடி?"
" அது எனக்குத் தெரியாது, நீ உங்க
அம்மைகிட்டத்தான் கேட்கணும்."
டாடி , எனக்கு பயமா இருக்கு, அவங்க ஒத்துக்கலேன்னா என்ன பண்றது?"
" ஒத்துக்கற மாதிரி பேசி கண்வின்ஸ் பண்ணனும்."
" ஓகே டாடி!" அவளுடைய குரலில் சுருதி இறங்கி இருந்தது.
ஆனந்தன் எம்பிஏ முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தான்.
அவன், தன் அப்பாவை விட உயரமும், மிகுந்த கம்பீரமும், பெண்களை கவரும் அழகுடன் இருந்தான். அவனுக்கு நிறைய, ஆண், பெண் சினேகிகதர்கள் இருந்தார்கள். ஆனால் எந்தப்